Skip to main content

'இத்தனை நாள் காத்திருந்தது இதற்குத்தான்' - பிக்பாஸ் ஆரவ் அதிரடி ரீ-என்ட்ரி

Published on 15/09/2018 | Edited on 16/09/2018
arav

 

பிக்பாஸ் டைட்டில் அடித்ததன் மூலமாகவும், ஓவியாவுடனான காதல் மூலமாகவும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் ஆரவ். இவருடன் பிக்பாஸில் இருந்த சகாக்கள் பெரும்பாலானோர் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்ட நிலையில் இவர் மட்டும் இன்னும் சினிமா பக்கம் இன்னும் தலையை காட்டவில்லையே என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் இந்த நீண்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஆரவ்வின் முதல் படமான 'ராஜபீமா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கும் இப்படத்தை சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் மோகன் தயாரிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பாலக்காட்டில் சமீபத்தில் முடிந்ததையடுத்து இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. மேலும் இப்படம் குறித்து நடிகர் ஆரவ் மனம் திறந்து பேசியபோது....

"ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் மிகச்சரியான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். அது நிறைவேறியதில் எனக்கு  மகிழ்ச்சி, அதே நேரத்தில் என் தோள்களில் இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. 'ராஜபீமா' தலைப்பு மற்றும் போஸ்டர் பார்த்தவர்கள் யானை மற்றும் பாகனுக்கும் இடையேயான உறவை பேசும் இன்னொரு கதை என்று நினைக்கிறார்கள். உண்மை தான், அந்த போஸ்டர்கள் அப்படி ஒரு உணர்வை கொடுப்பது இயல்பு தான். ஆனால், இது மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும். பல்வேறு வியாபார நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்வது நிறைய இடங்களில் நடந்து வரும் கொடுமையான ஒரு விஷயம். அதை கமெர்சியல் விஷயங்கள் கலந்து சொல்ல இருக்கிறோம். பொதுவாக, மனிதன் மற்றும் விலங்கு பற்றிய கதைகள் கிராமங்கள் அல்லது காடு, மலை பின்னணியில் இருக்கும். ஆனால் இந்த படம் பாலக்காடு, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் நடைபெறும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு படத்துக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்" என்றார். ஏற்கனவே 'சைத்தான்' போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் வெற்றிக்குப் பிறகு பொறுத்திருந்து நாயகனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஆரவ்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம்! பொண்ணு ஓவியா இல்லையாம்!!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
shs

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துவரும் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கி வரும் 'ஜோஷ்வா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் நடிகை ராஹியை ஆரவ் மனக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காதலித்துவரும் ஆரவ் - ராஹி இருவரும் வரும் செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் திருமணம் செய்யவுள்ளதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிக்பாஸ் மூலம் காதலர்கள் எனக் கூறப்பட்ட ஆரவ் - ஓவியா இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


 

Next Story

அஜித்தின் ஆதர்ச இயக்குனருடன் பிக்பாஸ் ஆரவ்... 

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என்று நான்கு படங்கள் அஜித்தை வைத்து இயக்கியவர் சரண். இவர் கடைசியாக ‘ஆயிரத்தில் இருவர்’என்றொரு படத்தை இயக்கி இருந்தார். நடிகர் வினய் நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
 

arav


அடுத்து இயக்குனர் சரண் எந்த படத்தை இயக்கப்போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்று படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 
 

பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ்தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ராதிகா சரத்குமார், ஜோடியாக காவ்யா தாப்பர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். போஸ்டரில் ராதிகா சிகார் பிடிப்பது போன்று போஸ் கொடுக்கிறார். இதை போலவே அஜித்தின் அசல் பட போஸ்டரில் சிகார் பிடிப்பது போல போஸ் கொடுப்பார் அஜித்.
 

devarattam


படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.