Skip to main content

காட்டுக்குள் இருக்கும் உயர்ந்த மரங்களில் ஏறும் அமலாபால் 

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
amala paul

 

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரித்து அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கும் படம் 'அதோ அந்த பறவை போல'. அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதைநாயகியாக நடித்துள்ளார். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இப்படம் உருவாகி வருகிறது. மேலும் அவரது கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் ஐ.பி.எல் வர்ணனையாளரும், ஜனத், ஹவுஸ்ஃபுல் 3, டேஞ்சரஸ் ஐசக் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவருமான சமீர் கோச்சார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரவீன் என்ற குழந்தை நட்சத்திரம் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

 

 

 


 
‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படம் குறித்து அவர் பேசும் போது..... "படத்தின் பெரும்பகுதி வனப்பகுதிகளில் உருவாவதால், அங்குள்ள பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள, குழுவாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் வடமாநிலக் காடுகளில் படத்தை உருவாக்குவது எங்களுக்கு சாதகமாக இருந்தது. படத்தில் அமலாபால், உயர்ந்த மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். பல காட்சிகளில் எந்த சிரமமுமின்றி படக்குழுவுக்கு அமலா பால் ஒத்துழைப்பு அளித்தது பாராட்டுக்குரியது. ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்களது கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. தேவையில்லாமல் எந்த காட்சிகளும் எடுக்கக்கூடாது என்பதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரும் ஒன்றாகப் பேசி முன்பே திட்டமிட்டோம். படத்தில் வரும் பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டவை. அந்த காட்சிகள், ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுக்கும். அடர்ந்த காடுகளில் படத்தை எடுக்க படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு, படம் சிறப்பானதாக உருவாக முக்கியமான காரணம். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காட்டுக்குள் சாகசம் செய்யும் அமலாபால்..! வெளியானது 'அதோ அந்த பறவை போல' டீசர்!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

 

 

Next Story

புகைபிடிக்கும் அமலாபால்...! சர்ச்சைக்குள்ளான புகைப்படம் 

Published on 18/12/2018 | Edited on 18/12/2018
amala paul

 

 

 

அதோ அந்த பறவை போல மற்றும் ஆடை படத்தில் நடித்து வரும் நடிகை அமலாபால் அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில், சமீபத்தில் வேட்டி அணிந்தபடி இருந்த அமலாபாலின் புகைப்படம் ஒன்று வைரலானது. இந்நிலையில் அமலா தற்போது  புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..."புகைப்பிடிப்பதை நான் ஊக்குவிக்கவில்லை, ஒரு ஹாலிவுட் ரசிகையின் கனவாக இந்த புகைப்படத்தை எடுத்துள்ளேன். ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் புகைப்பிடிப்பது போன்ற பிரபல காட்சி ஒன்று இருக்கும். அந்த வகையில் இது எனக்கான காட்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டியும், கண்டனம் தெரிவித்து வருவதும் தற்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.