Skip to main content

“நீங்கள் மனிதரில்லை மஹான்”- நடிகை கஸ்தூரி புகழாரம்! 

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவே முடங்கியுள்ள நிலையில், தினக்கூலிப் பணியாளர்கள் வருமானமின்றி, அத்தியாவசியப் பொருட்களுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. இதையடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் ஆகியோர் கஷ்டப்படும் குடும்பங்களுக்காக உதவி வருகின்றனர். 
 

kasthuri


இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூபாய் 3 கோடியைக் கரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்துள்ளார். பிஎம் கேர்ஸ்க்கு ரூபாய் 50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், ஃபெப்சிக்கு ரூ. 50 லட்சம், நடனக்கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ. 50 லட்சம் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ. 25 லட்சம், நான் பிறந்த இடமான ராயபுரம் மக்களுக்கு ரூ. 75 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதனால் ராகவா லாரன்ஸைப் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். அதில், “நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை வள்ளலைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதிதும் இல்லை. நீங்கள் மனிதரில்லை மஹான்.  வாழ்க வாழ்க நீ எம்மான்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்