Skip to main content

மரணத்திற்கு பின் மனிதன் உணர்வது என்ன?- செத்துப்பிழைத்தவள் தரும் விளக்கம்!!

Published on 02/09/2018 | Edited on 04/09/2018

 

soul

 

 

 

மரணம் எனும் உயிர் பிரிதலின் பிறகு என்ன நிலையை மனிதன் அடையக்கூடும் என பல்வேறு ஆராய்ச்சிகள் விவாதங்கள் ஆங்கங்கே நடந்துகொண்டிருக்கும் வேளையில் மரணம் எப்படிபட்டது மரணத்தை உணரும் தருணம் எப்படி இருக்கும் என்று புதுவிளக்கம் கொடுத்துள்ளார் ஹாங்காங்கை சேர்ந்த 25 வயது இளம்பெண்.

 

ஹாங்காங்கை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணான மிச்சைலி எல்மேன் என்பவருக்கு அவருடைய 11-வது வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த மூளை அறுவை சிகிச்சையின் பொழுது சில மணித்துளிகள் அவரது உயிர் பிரிந்ததாகவும் அதனை அவர் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அப்போது தான் கட்டிலில் படுத்திருந்தபடியே சில அடி உயரத்திற்கு மிதந்ததாக கூறிய மிச்சைலி எல்மேன் அந்த தருணம் மிக அமைதியாக இருந்ததாகவும் மரணம் என்பது அமைதியானது எனவே மரணத்தைக்கண்டு யாரும் அஞ்சவேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பூசாரி... சோகத்தில் கிராமத்தினர்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

3

 

தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து கனமழை பொழிந்து வருகிறது. பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடும் அளவுக்கு மழையின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 

 

திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பாலங்களில் காட்டாற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. துறையூர் அருகே சேனப்ப நல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் பூசாரி அரிராஜ் (40). கோவில் நடையைச் சாற்றி விட்டு வீடு திரும்பிய போது ஆற்றைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டாற்று வெள்ளம் அவரை இழுத்துச் சென்றுள்ளது. துறையூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை மீட்புக்குழுவினர் அரிராஜை தேடிய பொழுது இறந்த நிலையில் இருந்த அவரது உடலைச் சடலமாக மீட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.