Skip to main content

மருத்துவமனையை உல்லாச விடுதியாக மாற்றிய குடும்பம் - அமைச்சர் சி.வி.சண்முகம்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்காக சிறப்பு விசாரணைக் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

cv

 

 

இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
 

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதியாகியுள்ளதால் அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். வெளிநாட்டில் சிகிக்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

 

மத்திய அரசாங்கம், ஜெயலலிதாவிற்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தருவதாக சொல்லி, அவர்கள் வெளிநாட்டில் சென்று சிகிக்சை பெற அனைத்தும் நாங்கள் செய்கிறோம் என்று சொன்னபோது, அதை தடுத்திருக்கிறார்கள். 

 

அதிலும் குறிப்பாக இன்றைய சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷணன் 'ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று மருத்துவம்  செய்தால், இந்தியாவில் இருக்கும் மருத்துவர்களின் மதிப்பும், மரியாதையும் கெட்டுவிடும்' என்று சொல்லியிருக்கிறார்.  

 

ஒரு நோயாளியின் உயிரை பார்க்க வேண்டுமே  தவிர, அந்த மருத்துவருடைய மரியாதையை காப்பாற்றுவது முக்கியமல்ல. ஆக அந்த ராதாகிருஷ்ணின் பின்னணியை இந்த அரசாங்கம் உடனடியாக விசாரிக்க வேண்டும்.

 


 நான் உட்பட எந்த அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை இதுதான் உண்மை.  

 

நாங்கள் காலை முதல் மாலை வரை அந்த மருத்துவமனையில் இருந்தோம், ஆனால் இன்று ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், உப்மா சாப்பிட்டார் என்று சொல்லி 1 கோடியே  17 இலட்சம் ரூபாயை ஜெயலலிதாவின் மருத்துவ செலவில் சேர்க்கப்பட்டுள்ளது. யார் சாப்பிட்டார்கள் அந்த இட்லி, உப்மாவையெல்லாம்.  

 

மருத்துவமனையில் நான் உடம்பு சரியில்லை என்று அனுமதிக்கப்பட்டால் என்னுடன் ஒருவர் இருக்கலாம், மற்றவர்கள் மாலை வீட்டுக்கு சென்றுவிட வேண்டும்.  எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள்.

 


ஆனால், மருத்துவமனையையே உல்லாச விடுதியாக மாற்றி, ஒரு குடும்பம் மொத்தமும் அங்கு தங்கியிருந்து,  1 கோடியே  17 இலட்சம் ரூபாய்க்கு இட்லியையும், தோசையையும் சாப்பிட்டு இருக்கிறார்கள் என்றால், இவர்கள் ஜெயலலிதாவிற்கு மருத்துவம் பார்த்தார்களா அல்லது அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதில்தான் மர்மம் அடங்கியிருக்கிறது. 

 


75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவிற்கு, மூன்று மருத்துவர்கள் 'அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார், ஆஞ்சியோகிராம் செய்யவேண்டும்' என்று சொல்லியும். செய்யவிடாமல் தடுத்தது யார்?. ஆஞ்சியோகிராம் செய்யக்கூடாது,  செய்தால் ஜெயலலிதா பிழைத்துவிடுவார் என்று நினைத்தது யார்?.  தவறான தகவலை சொன்னது யார். தவறான சிகிக்சை கொடுத்த மருத்துவர் யார். அந்த மருத்துவமனையின் நோக்கம் என்ன. அந்த மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்?.  என்ற உண்மை அறியப்பட வேண்டும். என்று கேள்விகளை அடுக்கடுக்காய் அடுக்கினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
the former minister CV shanmugam who slammed the BJP

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் எஞ்ஜினியர்கள் வேலைக்கு எடுத்தனர். இவர்களில் ஒரு தமிழருக்கு கூட இல்லை. அத்தனை பேரும் வட இந்தியர்கள். ஜிப்மர் மருத்துவமனையில் வேலை கொடுங்கள், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கொடுங்கள். அரசு நிறுவனங்கள் எல்லாம் விற்று விட்டனர். இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே வளர்ந்துள்ளனர். ஒருவர் அம்பானி மற்றொருவர் அதானி. பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் திருவள்ளுவர், தமிழ் என்று பேசுவார். ஆனால் மறுபுறம் இந்தி திணிப்பு.

மத்திய பா.ஜ.க. அரசு மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடப் பார்க்கிறது. அமைதியாக உள்ள தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் சமம். வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை” என்று ஆவேசமாக பேசினார். 

Next Story

பா.ம.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் பேச்சுவார்த்தை?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
ADMK with pmk Renegotiate
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், இதுகுறித்து முடிவு செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் இன்று (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.