Skip to main content

வேலை இழந்த கூட்டுறவு சங்க பணியாளர் ஆட்சியரிடம் மனு..!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021
Former Minister Valarmati retaliated and lost his job, petition to the Collector

 

திருச்சி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய வின்சென்ட் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். கடந்த  27 மாதங்களாக வேலை இழந்து தவித்து வரும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்ற அரசாணை பெறப்பட்டும் இதுவரை பணி வழங்காததால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை அளித்துள்ளார். 

 

அந்த மனுவில் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2018ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்தேன். 2018 செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் அன்றைய செயலாளராக இருந்த பேபி மற்றும் தேர்தல் அலுவலர் இருவரும் வராத நிலையில் மற்ற 100 உறுப்பினர்கள்  முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மேலும் செயலாளரும், தேர்தல் அலுவலரும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வரவில்லை என்று ஒரு கடிதம் எழுதித் தர என்னை வற்புறுத்தினார்கள். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மூலம் கர்ணன் என்பவர் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

 

தலைவர் கர்ணன் என்னைப் பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த 2018 நவம்பர் மாதம் என்னை உத்தமர்சீலி ரேஷன் கடைக்கு பணி மாற்றம் செய்தார்கள். 6 மாத காலம் பணியாற்றி 2019 மே மாதம் ஆறாம் தேதி 30 ஆயிரத்து 822 ரூபாய் விற்பனை தொகையை சுற்றறிக்கை பூங்கொடியிடம் நேரடியாக சென்று கையில் ஒப்படைத்துவிட்டு சென்ற நிலையில் நான் பணத்தை கையாடல் செய்து விட்டேன் என்று கூறி என் மீது வழக்குத் தொடர்ந்து என்னை பணியில் இருந்து வெளியேற்றினார்கள். நான் நீதிமன்றத்தை நாடி அதன் மூலம் என் மீது சுமத்தப்பட்ட பொய்யான புகார்களை எதிர்த்து போராடி நீதிமன்ற ஆணை பெற்றேன். ஆனால் இதுவரை எனக்கு பணி வழங்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர்.கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி தவித்து வருகிறேன். எனவே நீதிமன்ற ஆணைப்படி எனக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.