Skip to main content

கூட்டுறவுத் தேர்தல்: பெண்கள் உட்பட 7 நபர்களுக்கு அரிவாள் வெட்டு!

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
Co-operative elections


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மருதங்கநல்லூர் கிராமத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதி கொண்டதில் இரு தரப்பிலும் பெண்கள் உட்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பலத்த காயம் அடைந்தவர்கள் கமுதி, ராமநாதபுரம் மற்றும் மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

   ஆணையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சங்த தலைவர் பதவிக்கு மருதங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வன்னிமுத்துவும், தி.மு.க. தரப்பில் இருந்து அதே கிராமத்தை  சேர்ந்த தியாகராஜன் ஆகியோரும் தங்களது ஆதரவாளர்களுடன் கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்களுக்காக மனுக்கள் பரிசீலனை ஆணையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இரு தரப்பும் வந்திருந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த வன்னிமுத்து தரப்பினர் தி.மு.க தரப்பை சேர்ந்த தியாகராஜன் தரப்பினர்களை அரிவாள் கத்தி வாள் உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பின்னர் பதிலுக்கு தி.மு.க.தரப்பினர்களும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதினர்.

 

   இதில் தி.மு.க. தரப்பை சேர்ந்த தியாகராஜன், முரளி, செல்லையா மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 4 நபர்களுக்கும், அ.தி.மு.க தரப்ரபை சேர்ந்த வன்னிமுத்து மனைவி கதிர்வேல், சரஸ்வதி மற்றும் தனிஸ்கோடி 3 நபர்களுக்கும் தலை கை கால் மார்பு உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்து பலத்த காயமடைந்த இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கட்டுள்ளனர். சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் இரு தரப்பிலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கதவை பூட்டி குண்டர்கள் துணையுடன் கூட்டுறவு தேர்தல்! அதிமுகவினர் உச்சக்கட்ட அராஜகம்; திமுகவினர் சாலை மறியல்

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
salem


 

சேலத்தில் குண்டர்கள் துணையுடன், கதவுகளை பூட்டிக்கொண்டு அதிமுகவினர் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தியதால் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 

சேலம் நகர கூட்டுறவு வங்கி 111 ஆண்டுகள் பழமையானது. 90 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருவதால் கூட்டுறவு தேர்தலின்போது இந்த வங்கியைக் கைப்பற்றுவதில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிடையே எப்போதும் கடும் போட்டி இருக்கும்.
 

நான்காம் கட்டத் தேர்தலையொட்டி, இன்று சேலம் நகர கூட்டுறவு வங்கியில் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதையொட்டி, அதிமுகவினர் இன்று காலை 6 மணிக்கே வங்கியின் உள்ளே சென்று கதவுகளை பூட்டிக்கொண்டனர்.

 

salem


 

காலை 9.30 மணிக்கு, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திமுக மத்திய மாவட்ட பொருளாளர் ஜி.கே.சுபாஷ் தலைமையில் திமுகவினர் வந்தனர். அவர்களுக்கு வேட்புமனு படிவம் வழங்கப்படாததோடு, வங்கியின் உள்ளே நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையினரும் அதிமுகவினரோடு கைகோத்துக்கொண்டு திமுகவினரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். 
 

மேலும், வங்கிக்கு சம்பந்தமே இல்லாமல் உறுப்பினர்கள் போர்வையில் குண்டர்களையும் ஆளுங்கட்சியினர் வரவழைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் வங்கிக்கு அருகில் உள்ள குறுகலான தெருக்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 
 

அதிமுகவினரின் அராஜகத்தைக் கண்டித்து, திமுகவினர் திடீரென்று சேலம் நகர கூட்டுறவு வங்கி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜி.கே.சுபாஷ், தரையில் படுத்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து முழக்கமிட்டார்.

 

salem


 

எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு பதிவாளர் ஆகியோரை கண்டித்து எழுதப்பட்ட தட்டிகளை கொண்டு வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டதாக ஜி.கே.சுபாஷ், திமுக நிர்வாகிகள் கேபிள் சரவணன், சாந்தமூர்த்தி, கணேசன், கேபிள் ராஜா, சிவாஜி, தேவிபாலா உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் பெண்கள்.
 

உதவி போலீஸ் கமிஷனர் அன்பு, டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சாலை மறியலால் சேலம் அக்ரஹாரம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

இதேபோல் சேலம் அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கியிலும் அதிமுகவினர் வங்கியின் கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற திமுகவினரை தடுத்தனர். போலீசாரும் அவர்கள் உள்ளே செல்லாத வகையில் அரண் அமைத்து தடுத்து நிறுத்தினர்.

 

salem


 

அம்மாபேட்டை திமுக பகுதி செயலாளர் தனசேகரன், முன்னாள் கவுன்சிலர் தாஜுதீன், நிர்வாகிகள் பிரபாகர், மனோகரன், வக்கீல் மஞ்சுளா, முருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் வங்கியின் முன்பு திரண்டு வந்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
 

அப்போது அவர்கள், 'எடப்பாடி அரசே எடுபிடி அரசே', 'ஓடிவிடு ஓடிவிடு நாட்டைவிட்டு ஓடிவிடு' என்று முழக்கங்களை எழுப்பினர்.
 

நான்காம் கட்டமாக இன்று வேட்புமனு தாக்கல் நடக்கும் பல கூட்டுறவு சங்கங்களிலும் குண்டர்கள், போலீசார் துணையுடன் அதிமுகவினர் உச்சக்கட்ட அராஜகத்தில் ஈடுபட்டனர்.