Skip to main content

ஃபேஸ்புக் தோழியை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய பொறியாளர்; 6 ஆண்டுகளுக்கு பின் விடுதலை

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

 

qwe

 

கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தனது ஃபேஸ்புக் தோழியை பார்ப்பதற்காக அந்நாட்டிற்கு சென்ற மும்பை இளைஞர் 6 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று இந்தியா திரும்பினார். ஹமீது அன்சாரி என்ற அந்த இளைஞர் சரியான ஆவணங்கள் இல்லாமல் ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தான் சென்று, அங்கு ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரு நாட்டு பேச்சுவார்த்தைகளுக்கு காரணமாக 6 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இன்று இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய அவர், தனது தாயாருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார்.  

 

  

சார்ந்த செய்திகள்