Skip to main content
Breaking News
Breaking

இந்தியாவில் ஒரே நாளில் 19.83 லட்சம் கரோனா மாதிரிகள் பரிசோதனை!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

ரக

 

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மஹாராஷ்ட்ராவில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மஹாராஷ்ட்ராவில் கரோனா பாதிப்பு அதிகப்படியாக இருந்து வருகிறது. அதிலும் தமிழகம், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

 

அந்தவகையில், இதுவரை இந்தியாவில் 30.75 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று (11.05.2021) மட்டும் 19.83 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்