Skip to main content

தமிழர்களை வாழ விடமாட்டார் மோடி! -மிரட்டும் ஹைட்ரோகார்பன் பூதம்!!!

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
hydrocarbon

 

கூடங்குளம் அணு மின்நிலையம், நியுட்ரினோ ஆய்வுத் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு வரிசையில் தமிழகத்தைச் சுடுகாடாக்குவதற்கு மோடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம்! முன்பு நெடுவாசலில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தது. ஆனால், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகத் திட்டம் கைவிடப்பட்டது.
 

நிலத்துக்கும் நீருக்கும் ஆபத்து!

டெல்டா மாவட்டத்தைப் பாலைவனமாக்கும் இந்தத் திட்டம் தமிழகத்தில் மூன்று மண்டலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இவற்றில்,  இரண்டை ஒப்பந்தம் எடுத்திருக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமம். மற்றொரு இடத்தை ஒப்பந்தம் எடுத்திருப்பது மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான ஓஎன்ஜிசி.
 

ஹைட்ரஜன், கார்பன் ஆகிய இரு வேதிப்பொருள்கள் இணைந்த மீத்தேன், ஈத்தேன், புரோத்தேன், ஹெக்சேன், மண்ணெண்ணெய், பெட்ரோலியம் போன்ற 14 வகைக் கனிமங்கள் ஹைட்ரோகார்பன்கள் எனப்படுகின்றன. பூமிக்கடியில்  பாறை இடுக்குகளில் படிந்திருக்கும் இந்த எரிவாயுவை ஆழ்துளையிட்டு உறிஞ்சி எடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.  ஆனால், 6000 மீட்டர் வரை துளையிடும்போது, கடல்நீர் உட்புகும் ஆபத்து உண்டு.  நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும். மண்ணும் பாழ்பட்டுப்போகும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.  


அபகரிப்பதற்கு ராணுவ பலப்பிரயோகம்! 

ஒஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பது தரைப்பகுதியில்.  அதாவது, கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டாரத்தில் 731 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோல், மும்பை கடற்கரை பகுதியில் 725 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் ஓஎன்ஜிசி நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.


 

hydrocarbon


 

கடந்த  1-ஆம் தேதி டெல்லியில் தர்மேந்திரபிரதான் முன்னிலையில் ஓஏஎல்பி (Open Acreage Licensing Policy) முறைப்படி வேதாந்தா குழுமத்திற்கு 41 இடங்களும், ஆயில் இந்தியா லிமிடெட்டுக்கு 9, ஓஎன்ஜிசிக்கு 2, கெயில், பி.பி.ஆர்.எல். மற்றும் எச்.ஓ.இ.சி ஆகிய நிறுவனங்களுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம்,  இந்த நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தலாம், எங்கெங்கு எண்ணெய் வளம் இருக்கிறது? ராணுவத்தை அனுப்பியாவது, அந்த நிலத்தைப் பிடுங்கிக் கொடுப்போம் என்பதுதான், ஒப்பந்தத்தின் சாராம்சம். எண்ணெய் எடுக்கும் நிறுவனம் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும், விற்பனைக்கு அனுப்பலாம். விலையையும் அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். ஓஏஎல்பி என்ற புதிய நடைமுறையை செயல்படுத்தும் கொள்கை முடிவு கடந்த 10-03-2016 அன்று மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 
 

ஆய்வுக்கு மட்டுமே அனுமதி! – அதிமுக கிச்சு கிச்சு!

இது குறித்து எதுவும் தெரியாமல்,  இந்தத் திட்டத்தைக் கண்டிப்பாக எதிர்ப்போம் என கம்பு சுற்றுகிறது அதிமுக அரசு.  துணை முதல்வர் ஓ.பி.எஸ், ''மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்கிறார். அமைச்சர் மாஃபா பாண்டியராஜனோ, "இப்போது ஹைட்ரோகார்பன் இருக்கிறதா? இல்லையா? என ஆய்வு செய்வதற்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்" என்று சிரிப்பு மூட்டுகிறார். 


 

hydrocarbon


 

இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கும் நிலையில், அக்டோபர் 3-ஆம் தேதி, சம்பிரதாயத்திற்காக திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தித் தன்  இருப்பைப் பதிவு செய்து கொண்டது திமுக. 
 

நச்சுப் பகுதியில் வாழ முடியாது!
 

hydrocarbon


 

மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், "வேதாந்தா குழுமத்திற்கும், ஓஎன்ஜிசிக்கும் கொடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். 78 வகையான ரசாயனங்களைக் கொண்டு நீரியல் முறையில் 30 ஆண்டுகள் வரை,  இவ்விரு நிறுவனங்களும் அனைத்து வகையான ரசாயனங்களையும் எடுக்கும்.  30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதி வாழமுடியாத நச்சுப்பகுதி ஆகிவிடும்.  விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்,  இந்த இடத்தைவிட்டு மக்கள் வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்காது." என்று  எச்சரிக்கிறார்.
 

திட்டமிட்டு ஏவப்பட்ட அரச பயங்கரவாதம்!
 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால் அதை எதிர்ப்பதற்கு மக்களுக்குத் துணிவு வரக்கூடாது என்பதற்காகத்தான், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதம் ஏவப்பட்டதோ? என்ற ஐயம் எழுகின்றது.” என்று கூறிவிட்டு,   “வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்"  என்று எச்சரித்திருக்கிறார். 

 

hydrocarbon




டெல்லியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழகத்தில் நாகை அருகே கடல் பகுதியில் தான் வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க இருக்கிறது. அதனால், தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார். அவரிடம் செய்தியாளர்கள்   ‘சிதம்பரத்தில் நிலப்பகுதியில் அல்லவா ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறது?’ என்று எதிர்கேள்வி கேட்டனர்.  இதற்குப் பதில் அளிக்காத பிரதான்,  “நெக்ஸ்ட் கொஸ்டீன்..” என்று அடுத்த கேள்விக்குத்  தாவினார்.
 

ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி பாலகுருசாமியிடம்  ‘மத்திய அமைச்சரே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறாரே?’ என்று கேட்டபோது,  “தமிழ்நாட்டுல பேருக்குத்தானே அதிமுக ஆட்சி? கன்ட்ரோல் முழுக்க சென்ட்ரல்தான்! தமிழ்நாட்ட கிள்ளுக்கீரையா பார்க்கிறாங்க. மத்திய அமைச்சர் இதுவும் பேசுவாரு. இன்னமும் பேசுவாரு. இங்கே எத்தனை குட்டிக்கரணம் அடிச்சாலும் பி.ஜே.பி.க்கு ஓட்டு விழாது. அதான், தமிழ்நாட்ட ஒண்ணும் இல்லாம பண்ணுறதுக்கு, அழிக்கிற வேலையில் இறங்கிட்டாரு மோடி.” என்றார் வேதனையுடன்.  
 

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி.  நடப்பதையெல்லாம் கவனித்தால், மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்காக ஆட்சி நடத்துவதுபோல் தெரியவில்லை.

 

 


 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார். 

Next Story

“பிரதமர் மோடி விஸ்வகுருவா? அல்லது மெளனகுருவா?” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசுகையில், “வரும் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப்போராட்டம். சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது. மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். அன்று கேட்ட மரண ஓலம் இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. செய்திகள் மூலம் தான் தூப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னது பொய். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்து தான் துப்பாக்கி சூடு நடந்துள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமே தெரிவித்துள்ளது.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதத்தை தமிழ்நாடு அரசு முன் வைத்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கட்சத்தீவு மீட்கப்படும் என்று கூறினீர்களே. அது நடந்ததா?. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னீர்களே. அதனை செய்தார்களா. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. விவசாயிகளை எதிரி போல் நடத்துவது தான் பா.ஜ.க.வின் அரசின் மாடலா. தி.மு.க. அரசின் கொள்கை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். பேரு மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். ஆனால் அதில், 60% நிதி மாநில அரசுதான் தருகிறது. இப்படி ஸ்டிக்கர் ஒட்டி கேவலமாக பிரசாரம் செய்கின்றனர்.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

பழனிசாமி யார்?. நேற்று யாரோடு இருந்தார்?. இன்று யாரோடு இருக்கிறார்? நாளை யாருடன் இருப்பார்?. நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுவார் என்பதை மக்கள் எடை போட்டு தீர்ப்பளிப்பார்கள். பழனிசாமி அவர்களே உங்களுக்கு முன்னாள், இன்னாள் கிடையாது என்னாளும் பா.ஜ.க.தான் எஜமானரா?. மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத பாதம்தாங்கி பழனிசாமிதான் தமிழ்நாட்டை காப்பாற்றப் போகிறாரா?. பழனிசாமி அவர்களே! மாநில உரிமைகளை அடகு வைத்ததே நீங்கள்தான். மோடி பற்றி பாசாங்கிற்குகூட பத்து வார்த்தை பேசாத பழனிசாமி, மாநில உரிமைகளை மீட்கப் போகிறாராம். பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க. தி.மு.க. - அ.தி.மு.க. இடையே தான் போட்டி என எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்காரு. அந்த அளவிற்காவது அவருக்கு புரிதல் இருக்கே என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பழனிசாமி அவர்களே களத்தில் மோதுவோம் மக்கள் தீர்ப்பளிக்கட்டும்.

Is Prime Minister Modi Vishwaguru or Melanaguru CM MK Stalin

தமிழக மீனவர்கள் கைது, அபராதம் விதிப்பு, படகுகள் பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டிருக்கிறது. மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத பிரதமர் மோடி விஸ்வகுருவா? அல்லது மௌனகுருவா?. கச்சத்தீவு மீட்கப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் சொன்னார். ஆனால் இன்று வரை பா.ஜ.க. அரசு அதை செய்துள்ளதா. தமிழக மீனவர்களை காக்கத்தவறிய மோடி எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்க வருகிறார்” எனத் தெரிவித்தார்.