Skip to main content

"நீங்க என்னை மறந்துடுவீங்க... வரலக்ஷ்மியை மறக்கமாட்டீங்க" - சண்டக்கோழி விஷால் 

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

'சண்டக்கோழி - 2' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நாயகன் விஷால் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். விஷால் - வரலக்ஷ்மி நட்பு பரவலாகப் பேசப்படுவது. சண்டக்கோழி - 2 தான் இவர்கள் இணைந்து நடித்து வெளிவரும் முதல் படம். இதற்கு முன்பு இவர்கள் நடித்த 'மதகஜராஜா' திரைப்படம் வெளிவரவேயில்லை. தந்தை சரத்குமாரை நடிகர் சங்கத் தேர்தல், அதனைத் தொடர்ந்து ஊழல் புகார் கொடுத்தது என பல சந்தர்ப்பங்களில் எதிர்த்து வந்துள்ள விஷால், மகள் வரலக்ஷ்மியுடன் நட்புடன் இருக்கிறார். இதை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

 

vishal



சண்டக்கோழி 2 படத்தின் டீஸரில் வரலக்ஷ்மி வரும் இரண்டு வினாடி காட்சியை பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், சண்டைக்கோழி 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் லிங்குசாமியின் அனுமதியுடன் அதைப் பற்றி சில வார்த்தைகளை பேசினார் விஷால்.

 

varalakshmi



"லிங்குசாமியின் அனுமதியோட சண்டைக்கோழி 2-ல் வரலக்ஷ்மி பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன். ஏன்னா, லால் சார், வரலக்ஷ்மி இரண்டு பேரின் பாத்திரம் குறித்து கொஞ்சமாத்தான் சொல்லணும்னு லிங்குசாமி சொல்லியிருக்கார். அதைத்தாண்டி ஒரே ஒரு விஷயம் சொல்றேன். நிச்சயமாக, நீங்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னை, எங்களையெல்லாம் மறந்துடுவீங்க. ஆனால் வரலக்ஷ்மி கதாபாத்திரத்தை மறக்க மாட்டீர்கள், அவ்வளவு பலமான பாத்திரம். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.

Next Story

2026 ஆம் ஆண்டில் புதிய கட்சி; நடிகர் விஷால் அறிவிப்பு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Actor Vishal announced that he will start a new party in 2026

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடத்துக்கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும்; மக்களுக்கு போதுமான வசதியில்லை என்று கூறிய விஷால், அதன் காரணமாகவே தான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டில் நடக்கும் சட்ட மன்ற தேர்தலில் களம் காணப்போவதாக தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஷாலும் 2026 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.