Skip to main content

இரண்டு நாள் தூங்காமல் நடித்த விஷால் !

Published on 18/02/2019 | Edited on 18/02/2019
vishal

 

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில்  விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட்  ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட்டில் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு  சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து  நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டது.

 

 


படத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும், படத்தின் நாயகன் விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து  நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய தொடர் நடிப்பில் ஈடுபட்டார். ஏற்கனவே இந்த படத்திற்காக  விஷால் மிடுக்காக ஒரு கம்பீரமான தோற்றத்திற்கு தன்னை மாற்றி இருந்த நிலையில் தற்போது தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபட்டு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பின்னாடி ரவிக்குமார், முன்னாடி பார்த்திபன், நடுவில் விஷால்...மெர்சலான திடீர் கூட்டணி 

Next Story

ராகவா லாரன்ஸ், சூர்யா வராங்க... இப்போது விஷாலும் வர்றார்...!  

Published on 07/03/2019 | Edited on 07/03/2019
vishal

 

 

'சண்டக்கோழி 2' படத்திற்கு பிறகு விஷால் தற்போது 'அயோக்யா' படத்தில் நடித்து வருகிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவிஇயக்குனர் வெங்கட் மோகன் இயக்குகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'டெம்பர்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரம் 19ம் தேதி வெளியாகவுள்ளதாக நடிகர் விஷால் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்கிரின் சீன் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஏற்கனவே ராகவா லாரான்ஸ்சின் காஞ்சனா 3, சூர்யாவின் என்.ஜி.கே படங்கள் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.