Skip to main content

ரஜினி வீட்டில் விரைவில் கெட்டிமேளம்...!

Published on 13/11/2018 | Edited on 13/11/2018
rajini

 

 

 

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், வரும் தை மாதத்தில், இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது. இவரும், ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர்கள். விசாகனுக்கும், சவுந்தர்யாவுக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய, நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் வஞ்சகர் உலகம் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துள்ள விசாகன் வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்து சென்னையில் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீச்சல் குளப் புகைப்படத்தை நீக்கிவிட்டு விளக்கமளித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்...

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா சமீபத்தில்தான் விஷாகன் என்ற நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர் தன்னுடைய சுற்றுலா படங்களை ட்ராவல் டைரி என்ற தலைப்பில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவ்வரிசையில் தன் மகன் வேத் உடன் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி கொடுக்கும் புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
 

sowndarya

 

 

இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் விமர்சனம் எழுந்தன. தமிழகமே தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனை ஆபத்தான நிலையில் இருக்கிறது இந்த சமயத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பதுபோல புகைப்படம் தேவைதானா. இவ்வளவு தண்ணீரை வீணடிக்கிறீர்களே என்று பலரும் விரக்தியில் அவருக்கு கமெண்ட் செய்து வந்தனர்.
 

பின்னர், மக்களின் கருத்துக்களை உணர்ந்த சவுந்தர்யா அந்த படத்தை உடனடியாக ட்விட்டரிலிருந்து டெலிட் செய்தார். அதனை அடுத்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், “தண்ணீர் பற்றாக்குறையால் என்னை சுற்றிலும் உள்ளவர்கள் அவதிப்படும் நேரத்தில் அந்த படம் வேண்டாம் என்று நீக்கி விட்டேன். மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதால் அவனுக்கு அளிக்கும் பயிற்சியை பகிரும் நோக்கத்தில் தான் அந்த படத்தை வெளியிட்டேன்”. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
 

 

 

Next Story

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மற்றும் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ரஜினி !

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
rajini

 

ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்தார். பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து சௌந்தர்யா ரஜினிக்கும் தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் சமீபத்தில் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நேற்று திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரை உலகை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதில்...

 

 

"என் மகள் சௌந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகைதந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திரு முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திரு திருநாவுக்கரசர், திரு அமர்நாத், திரு கமலஹாசன், மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல் துறை நண்பர்கள் என திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார் ரஜினிகாந்த்