Skip to main content

"நீங்கள் முற்றிலும் குணமடைந்து முன்பை விட வலுவாக திரும்பி வருவீர்கள்" - பாடகி ஸ்ரேயா கோஷல் உருக்கம்!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
cnvnv nm

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி நேற்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார். 

 

இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் எஸ்.பி.பி குணமாக வேண்டி பாடகி ஸ்ரேயா கோஷல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "எங்கள் அன்பான எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் சாருக்கு எனது பிரார்த்தனைகள். நீங்கள் முற்றிலும் குணமடைந்து முன்பை விட வலுவாக திரும்பி வருவீர்கள். மேலும் உங்கள் ஆத்மார்த்தமான உரத்த குரலால் மீண்டும் எங்களை கவர்ந்திழுப்பீர்கள்.. #GetWellSoonSPBSIR" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்