Skip to main content

மீண்டும் சைன்ஸ் பிக்சன் படத்தை இயக்கும் ஷங்கர் 

Published on 09/01/2019 | Edited on 09/01/2019
shankar

 

 

ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் இப்படத்தில் கொரிய நடிகை ஒருவரும் கமலுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் 'இந்தியன் 2' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக ஒரு சயின்ஸ்பிக்‌‌ஷன் படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் ‌ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாகவும், மேலும் இந்த கதையில் ஹிருத்திக் ரோ‌ஷன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசன் நேரில் ஆஜராக அவசியமில்லை! -இந்தியன் 2 விபத்து வழக்கில் உத்தரவு!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

இந்தியன் 2 படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக,  நடிகர் கமல்ஹாசன் விபத்து நடந்த இடத்தில் விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்புத்தளத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக நாளை  ஈவிபி பிலிம் சிட்டியில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி, சம்பவம் நடந்தது குறித்து நடித்துக்காட்ட வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு,  நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

 

No need to visit Kamal Haasan! Indian-2 case ordered!

 

ஏற்கனவே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் கமல்ஹாசன் தரப்பில், ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைக்கு 3 மணி நேரம் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், அவர் அரசியல்வாதியாக இருப்பதால், துன்புறுத்தும் நோக்கத்தோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும், சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அதே இடத்திற்கு விசாரணைக்குச் செல்ல இயலாது எனவும், இது விபத்து வழக்கு; கொலை வழக்கு அல்ல என்றும் வாதம் வைத்தனர்.  

அரசுத்தரப்பில், விபத்து நடந்த போது நடிகர் கமல்ஹாசன் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவர் நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். கமல்ஹாசன் மட்டுமல்லாமல், இந்தியன் 2 படத்தின் இயக்குநர் சங்கர் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த 23 பேருக்கும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகன் என்பதற்காக புலன்விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. இதில் எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை என வாதம் வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, நடிகர் கமல்ஹாசன் நாளை ஈவிபி பிலிம் சிட்டியில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், புலன்விசாரணைக்குப் பின்னர் தேவைப்படும் பட்சத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என நடிகர் கமல்ஹாசனுக்கு  அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

 

 

Next Story

கமல்ஹாசன் பற்றி தெரியாத ஒரு விஷயம்..! 

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் அவர் குறித்த ருசிகர தகவல் ஒன்றை இங்கே பகிர்கிறோம்.... சினிமாவில் பெரும்பாலான ஜெயித்த நடிகர்கள் இரண்டு அல்லது மூன்று மூன்று மொழிகளை கற்றுவைத்திருப்பர். அதிலும் ஒன்றிரண்டு நடிகர்கள் ஐந்து முதல் ஆறு மொழிகள் வரை கற்றுவைத்திருப்பர்.

 

kamal

 

sdfds

 

அந்தவகையில் அதில் ஒருவரான நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் சரளமாக பேச தெரியும். அதுமட்டுமல்லாமல் இன்னும் சில மொழிகளை மேலோட்டமாகவும் கற்றுவைத்துள்ளார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் அவர் நடித்த படங்கள் வெள்ளி விழாக்கள் கொண்டாடி உள்ளன. இந்திய நடிகர்களில் இதுவரை யார் படமும் இப்படி ஐந்து மொழிகளில் வெளியாகி வெள்ளிவிழாவும் கொண்டாடியதில்லை. குறைந்தபட்சம் வெற்றிபெற்றதும் இல்லை. அந்த வகையில் கமல்ஹாசனின் இந்த அரிய சாதனையை இதுவரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.

 

Pollution