Skip to main content

'முதலில் மோடியை நினைத்து கவலைப்படலாம்' - இந்தியருக்கு சிம்பு பட நடிகை பதிலடி 

Published on 05/11/2020 | Edited on 05/11/2020
richa

 

 

தமிழில் சிம்புவுடன் ஒஸ்தி, தனுசுடன் மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபத்யாய், தற்போது திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்தியாவில் பிறந்திருந்தாலும், சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறிய ரிச்சா, அமெரிக்க குடியுரிமையை பெற்றவர்  ஆவர்.

 

தற்போது நடந்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் , தற்போதைய அதிபர் ட்ராம்பும் அவரை எதிர்த்து ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகளை அறிவிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் நடிகை ரிச்சா, ஜோ பைடனுக்கு ஆதரவாக ட்விட் ஒன்றை பதிவிட்ருந்தார்.அந்த ட்விட்டுக்கு, இந்தியாவை சார்ந்த ஒருவர், ட்ரம்ப் தான் வெல்வார் என பதிலளிக்க, இருவருக்குமிடையே வார்த்தை போர் வெடித்தது. 

 

நடிகை ரிச்சா, நீங்கள் உண்மையை உணராமல், கற்பனையான ஒன்றை பேசுகிறீர்கள் என அந்த இந்தியரிடம்  கூறினார். இதைத்தொடர்ந்து, அந்த இந்தியர், "அப்படியென்றால் காஷ்மீர் இனி தனி நாடாகும் என கூறுகிறீர்களா?" என கேட்க, அதற்கு "நான் முதலில் அமெரிக்கராக எனது உரிமைகளை  பற்றி கவலைப்படுகிறேன்" என பதிலளித்தார் ரிச்சா. அதைத்தொடர்ந்து, அந்த இந்தியர், நானும் அதேபோல் இந்தியர்களை நினைத்து கவலைப்படுகிறேன் என கூற, அப்படியென்றால் நீங்கள் முதலில் மோடியை பற்றி கவலைப்படலாம். அதன் பிறகு அமெரிக்க அதிபரை பற்றி கவலைப்படலாம் என கூறியுள்ளார் ரிச்சா கங்கோபத்யாய். இவ்வாறு அவர்களுக்குள் வார்த்தைப்போர் தொடர்ந்தது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்