Skip to main content

தயாரிப்பில் இறங்கிய விக்ரம் வேதா ஜோடி...

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

‘வ குவார்ட்டர் கட்டிங்’ என்ற படத்தை இயக்கி 7 வருடங்களுக்குப் பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினார்கள் காயத்ரி, புஷ்கர். மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். 100 நாட்களைக் கடந்து இந்தப் படம் ஓடியது. இந்தப் படத்துக்காக நிறைய விருதுகளும் கிடைத்தன.
 

gayatri pushkar


இந்நிலையில், இவர்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
 

“பல வருடங்களுக்கு முன்னால், இளம் இயக்குநர்களிடம் சில கதைகள் கேட்டோம். அந்தக் கதைகளைப் படமாகத் தயாரிக்க ஆசைப்பட்டோம். ஆனால், அப்போது சூழ்நிலை சரியில்லை. ஆனால், தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.‘வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்’ என்ற எங்களுடைய புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். எங்களுடைய முதல் தயாரிப்பு குறித்து நாளை அறிவிக்க இருக்கிறோம்” என்று பதிவில் தெரிவித்துள்ளனர்.
 

devarattam

 

புஷ்கர் - காயத்ரி,‘விக்ரம் வேதா’படத்தை இந்தியில் இயக்குவதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இந்து ஒற்றுமையை காட்டுங்கள்" - 'நெஞ்சுக்கு நீதி' படம் குறித்து காயத்ரி ரகுராம் கருத்து

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

gayatri raguraman talk about nenjukku needhi movie

 

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த  வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். நேற்று (20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் 'நெஞ்சுக்கு நீதி' படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஆர்டிகல் 15 திரைப்படம் பாஜக அரசால் வரவேற்கப்பட்டது. சமத்துவ ஒற்றுமைக்காக பாஜக அரசால் கொண்டாடப்பட்டது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். ஆனால் திமுக உண்மைக்கு கடுமையான மாறான வசனங்களுடன் திரைப்படத்தை ஸ்டிக்கர் ஒட்டி திராவிடமயமாக்குகிறது. இது நெஞ்சுக்கு நீதி. பலாத்காரத்தில் சாதி இல்லை. அது ஒரு மனிதனின் கொடூரமான மனம். கற்பழிப்புக்கு காரணம் குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மட்டும் அல்ல. கற்பழிப்புக்கு வயது இல்லை. சிலர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். துரதிருஷ்டவசமாக பலர் கற்பழிக்கப்படுகிறார்கள். நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு, பிராமண சகோதர சகோதரிகளின் அவதூறுகளுக்கு எதிராக அனைத்து இந்துக்களும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. அனைத்து சாதி இந்து ஒற்றுமைக்காக பிராமணர்களுக்கு மட்டுமின்றி இந்து ஒற்றுமையை காட்டுங்கள். இன்று எந்த பிராமணர்களோ எந்த ஜாதியினரோ எந்த அட்டவணை ஜாதியினரையும் தவறாகப் பேசுவதில்லை. இந்த படம் சாதியை மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இன்று பிசிஆர் சட்டம் யார் வேண்டுமானாலும் தண்டிக்கப்படும் அளவுக்கு வலுவாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Next Story

மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும்..? - நடிகை காயத்ரி கேள்வி! 

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருந்த 55 வயது மருத்துவர் சைமன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய  எடுத்து செல்லப்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்குத் தலைவர்கள், மருத்துவர்கள், திரையுலகினர், மருத்துவச் சங்கத்தினரும் பலரும் வேதனை தெரிவித்து வரும் நிலையில் சைமனின் இறுதிச் சடங்கு குறித்து நடிகை காயத்ரி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

 

 

 

 

hh

 

"நம் உயிரைக் காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். நமக்காக டாகடர் சைமன், டாகடர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக்கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்" எனக் கூறியுள்ளார்.