Skip to main content

'உலகமே எதிர்பார்க்கும் படத்திற்கு வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி' - ஏ.ஆர்.முருகதாஸ்

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
murugadoss

 

 

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பிரபல ஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ்' எண்ட் கேம்' படத்துக்கு வசனம் எழுதுகிறார். கோடை விடுமுறையில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து அவர் பேசியபோது... "எனக்கு எப்போதுமே அவெஞ்சர்ஸ் கதைகள் மிகவும் பிடிக்கும். உலகமே  எதிர்பார்க்கும் ஒரு படத்துக்கு தமிழில் வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி. என் மகன் ஆதித்யாவுக்கு தான் இதற்கு நன்றி சொல்லவேண்டும். அவர் கேட்டுக் கொண்டதால் தான் இதை ஒப்புக்கொண்டேன். உலக புகழ்பெற்ற சூப்பர்மேன் கதாபாத்திரங்கள் என் வசனத்தை பேசப்போகிறார்கள். முடிந்தவரை தமிழ் ரசிகர்கள் படத்தோடு தங்களை இணைக்கும் வகையில் வசனங்கள் இருக்கும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சூப்பர்ஸ்டாருக்கு வில்லியாக லேடி சூப்பர்ஸ்டார் ! ரசிகர்கள் அதிர்ச்சி 

Published on 17/04/2019 | Edited on 17/04/2019
rn

 

 

k

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினி ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா நடிப்பதாக புதிய தகவல் கசிந்து வருகிறது. மேலும் தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிவருவதாகவும், மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படத்திற்காக 60 நாட்கள் நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

Next Story

மாலை...பரிவட்டம்...ஜிப்பா...தொடங்கியது தர்பார் !

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் பாரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

Darbar

 

மேலும் இதனை  தொடர்ந்து  படப்பிடிப்பு பூஜையுடன் இன்று மும்பையில் துவங்கியது. இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் ரஜினி மாலை, பரிவட்டம், ஜிப்பா அணிந்திருந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.