Skip to main content

சூரியபுயல் பற்றிய சோதனைக்கு நாசா அனுப்பும் ‘பார்க்கர் சோலார் புரோப்’

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
nasa

 

 

 

மனிதன் அறிவியலின் உதவியால் நிலா, செவ்வாய் கிரகம் என அனைத்திலும் தனது தொடர் முயற்சிகளின் மூலம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறான். ஆனால் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிகழ்வுகளுக்கு சூரியன் மட்டும் விதிவிலக்கல்ல. 1970-ஆம் ஆண்டே ஹீலியம்-2 என்ற விண்கலம் சூரியனை ஆராய அனுப்பட்டது. ஆனால் அந்த விண்கலமானது சூரியனிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல் தூரத்திற்கு அருகில் மட்டும்தான் சென்று ஆய்வு செய்தது.

 

 

அத்தனை தொடர்ந்து சூரியன் மற்றும் சூரியப்புயல் தொடர்பாக ஆராய நாசா திட்டமிட்டு ‘பார்க்கர் சோலார் புரோப்’  என்ற புது விண்கலத்தை அனுப்பவுள்ளது. இந்த விண்கலமானது சுமார் 1,400 செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சூரியனிலிருந்து 40 லட்சம் மையில் தொலைவிலிருந்து இந்த விண்கலம் ஆய்வு செய்யும் எனவும் நாசா அறிவித்துள்ளது.

 

 

அமெரிக்க நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இந்த விண்கலம் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. இந்த விண்கலம் தொடர்ந்து 6 வருடம் 11 மாதங்கள் சூரியனை 24 முறை சுற்றிவந்து ஆய்வு செய்யவுள்ளது எனவும் நாசா அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

 

 

 

Next Story

தொடரும் தாக்குதல்; 3 லட்சம் காசா மக்கள் அகதிகளாக வெளியேற்றம்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Continued attack; 3 million Gazans evacuated as refugees

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் மனித உரிமை அமைப்புகள் சர்வதேச நாடுகளும் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாலஸ்தீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

இந்நிலையில் ஐநா வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை இஸ்ரேல் போர் தொடர்ந்து வரும் நிலையில் காசாவில் இருந்து சுமார் 3.38 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காசாவில் 22 லட்சம் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் 11 சதவிகித மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதும் தீவிர தாக்குதல் தொடர்ந்து வருவதால் காசாவில் மீதம் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது.