Skip to main content

’பயிரெல்லாம் கருகலையா...சும்மா வதந்திய கிளப்புறாங்களா....?’- அமைச்சர் காமராஜை விளாசும் விவசாயிகள்

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
theni

 

கடைமடை பகுதிகளில் கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதனால் நாகை – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

மேட்டூர்அணை எந்த ஆண்டும் நிகழாத வகையில்   நான்குமுறை அதன் முழு கொள்ளளவை எட்டியது இருந்தபோதிலும் டெல்டா மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு  போதுமான தண்ணீர் வந்து சேராத காரணத்தால், நேரடி நெல்விதைப்பு செய்த நெற்பயிர்கள  முற்றிலுமாக கருகி வருகின்றனர். 

 

thirumavalavan

 

இந்நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிரை காப்பாற்ற முக்கொம்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நாகையை அடுத்த சிக்கலில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் அச்சங்கத்தின் மாநில பொதுசெயலர்  சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது, கடைமடைக்கு விரைந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், வாய்க்கால்களை முறையாக தூர்வாராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். 

 

பின்னர் அரசு அதிகாரிகள் நடத்திய நீண்ட நேரபேச்சுவார்த்தைக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிகொண்டனர். தொடர்ந்து முறையின்றி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடவும், கூடுதல் தண்ணீர் திறக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

விவசாயிகளின் போராட்டத்தால் நாகை முதல் திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

 

நாகை திருவாரூர் சாலையில் போராட்டம் நடந்துவந்த அதே நேரத்தில், உணவு அமைச்சர் காமராஜ், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து வர்த்தகர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பத்திரிக்கையாளர்களும், வர்த்தகர்களும் சமுக ஆர்வளர்களும் காமாராஜிடம், "சம்பா பயிர்கள் கருகிவருகிறதே, தண்ணீர் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளக்கூடாதா ? விவசாயம் செழித்தால் தானே எங்களுக்கு வியாபாரம் நடக்கும் வர்த்தகம் செழிக்கும் என்றனர்.

 

அதற்கு பதிலளித்த காமராஜ் ,  பயிரெல்லாம் கருகல, சும்மா வதந்திய கிளப்புறாங்க, என்றார். வதந்தி என்றால் திருவாரூர் நாகை சாலையில் நடந்த போராட்டம் எதற்காக வதந்திக்காகவா, போராடத்தில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தது வேலை வெட்டியில்லாமலா அமைச்சர் பதில் கூறனும் "என்கிறார் திருவாரூர் விவசாய சங்க தலைவர் மாசிலாமணி. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.