Skip to main content

சிவசங்கர் பாபா விவகாரம்- புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

sivashankar baba issues cbcid police announcement

பாலியல் புகாரில் சிக்கி கைதான சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார். மேலும், சிவசங்கர் பாபாவை ஜூலை 1- ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், "சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் தர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணை அதிகாரி குணவர்மன்- 98405- 58992, ஆய்வாளர்- 98406- 69982 என்ற எண்களில் புகாரளிக்கலாம். inspocu2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மாணவிகள் புகாரளிக்கலாம். புகார் தருவோரின் விவரங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு பாதுகாப்பும் அளிக்கப்படும்" என சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்