Skip to main content

ஆப்பு வைத்துவிடும் இந்த ஆப்... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி ரூ. 500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின் மக்கள் அதிகளவில் ரொக்கம் அற்ற வர்த்தகத்தை நோக்கி நகர்ந்தனர். இதனால் அதிகளவில் மொபைல் வாலெட் பயன்பாடு அதிகமானது. 

 

rbi

 

மொபைல் வாலெட் ஆப்களை டவுன்லோட் செய்து, வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கை அந்த ஆப்களில் இணைத்துவிட்டால், எளிதாக பண பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். ஆனால், இது போன்ற ஆப்களினால் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தகவல்கள் திருடுபோக வாய்ப்பு உள்ளதால், இந்த சேவைகளை முறைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளை கொண்டுவந்தது. 

 

இந்நிலையில் ‘AnyDesk' எனும் ஆப் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் பணம் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆப்-ல் UPI எனும் வசதி மூலம் சில மோசடி பரிவர்த்தனை நடைபெறுவதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. 

 

பொதுவாக எந்த ஆப் டவுன்லோட் செய்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு முன் இறுதியாக அந்த நிறுவனத்தின் சட்டத்திட்டங்களுக்கு உட்படுகிறீர்களா என்று அனுமதி கேட்கும், அதற்கு சம்மதம் தெரிவித்து அந்த ஆப்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள். 

 

அதேபோல் இந்த ஆப்பிற்கும் சம்மதம் தெரிவித்ததும் 9 இலக்கு கொண்ட எண் டவுன்லோட் செய்த மொபைலுக்கு வரும்.  சைபர் கிரிமினல்கள், அந்த எண்ணை வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி பெற்று விடுவார்கள். அந்த நம்பரை பெற்றுவிட்டால், வாடிக்கையாளர்களின் மொபைல் செயல்பாடு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். அதன்பின் வாடிக்கையாளர்களின் பணம் முழுவதும் அவர்களின் அனுமதியோடே திருடப்படும் அபாயம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார். 

Next Story

“97 % ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன” - ரிசர்வ் வங்கி தகவல்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
97 % Rs 2000 notes withdrawn RBI Information

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே ரிசர்வ் அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகும் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த மதிப்பு மொத்தமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 97.38 சதவீதம் ஆகும். அதாவது 97.38 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் 9 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் மீதமுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.