Skip to main content

ஐ.எஸ். அமைப்புக்கு அனுப்பட்ட பெண்கள்! குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

Bail detained by kerala high court

 

                                                                                                                                                                                          கேரளாவில் இருந்து செவிலியர் மற்றும் படித்த இளம் பெண்களை அரபு நாடுகளில் சூப்பா் மார்க்கெட் போன்ற கடைகளில் அதிக சம்பளத்துடன் வேலை செய்வதற்காக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று அங்கு அடிமை வேலைகளில் ஈடுபடுத்துவதோடு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான பாலியல் தேவைகளுக்கு சப்ளை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த கொடுமையிலிருந்து தப்பி வந்த 31 வயது இளம் பெண், கொச்சி கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 4 ஆண்டுகளாக இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி 200க்கு மேற்பட்டவர்களை அரபு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் 90 சதவீத பெண்களை வீட்டு வேலைக்கு அடிமைத் தனமாக இருக்க வற்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். ஏராளமான பெண்களை சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அவர்களின் பாலியல் தேவைகளுக்காக அனுப்பியுள்ளனர். இதுஎல்லாம் தெரிந்தே திட்டமிட்டு அந்த நிறுவனம் அனுப்பி வந்துள்ளது.

 

இது சம்பந்தமாக தரகராகச் செயல்பட்ட கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பானு ஃபர்கானா மற்றும் கண்ணூரைச் சேர்ந்த மஜீத், பத்தணம்திட்டயைச் சேர்ந்த அஜிமோன் ஆகியோர் மீது கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இதில் பானுவின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போது, அவர் தப்பி குவைத்துக்கு சென்று தலைமறைவானார். அதே போல் மஜீத் பக்ரைனியில் உள்ளார்.


இதனைத் தொடர்ந்து ஃபர்கானா மற்றும் அஜிமோன் முன் ஜாமீன் கேட்டு எா்ணாகுளம் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதில் இருவருடைய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அஜிமோன் எா்ணாகுளம் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் ஃபா்கானா தலைமறைவாகியுள்ளார் இதனையடுத்து அவர் வெளி நாடு தப்பிச் செல்லாதபடி அவரின் பாஸ்போட்டை முடக்கி கேரளா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.