Skip to main content

காவிக் கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் - நாஞ்சில் சம்பத் அதிரடி!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

ரக

 

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசினார்.

 

அவர் பேசியதாவது, "திராவிட இயக்கத்திற்கு என ஒரு பெருமை இருக்கிறது. இந்தத் திராவிட இயக்கத்தைப் பற்றி நாம் பேசாத பேச்சுகள் இல்லை. வானளவுக்குப் பேசியுள்ளோம். அண்ணா நாடாளுமன்றத்தை திகைக்க வைத்துள்ளார். நான் ஒரு திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று பெருமையாகக் கூறியுள்ளார். அண்ணா நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சுகளைக் கேட்ட, அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பாபு ஜெகஜீவன் ராம் எழுந்து நானும் திராவிடன்தான் என்று கூறியதை யாரும் மறக்க மாட்டோம். அவரையே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று பேசவைத்த நாக்கு அண்ணாவின் நாக்கு! காவிக் கும்பல்களுக்கு ஒரு முடிவெடுக்க வேண்டுமானால் எட்டுத்திசைகளிலும் நம் முழக்கத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான தொடக்கத்தை தம்பி உதயநிதி இங்கே தொடங்கி வைத்துள்ளார். அன்றைக்கு திராவிட இயக்கத்தாருடைய பேச்சைக் கேட்காமல் இருந்திருந்தால், இந்த இடத்திற்கு நான் வந்திருக்கவே மாட்டேன். 1977-ம் ஆண்டு நெல்லையில், கலைஞர் நெருக்கடி நிலையை எதிர்த்துப் பேசிய பேச்சுகளைக் கேட்காமல் இருந்திருந்தால் நான் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேன். 

 

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வார்த்தைகள் அதிகம் ஒலித்துக்கொண்டு இருக்கும். ஆனால், தற்போது ஒரு வார்த்தை தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அது, அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதுதான். அவரை கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இந்தத் திராவிட இயக்கம் செய்து வருகின்றது. எந்த ஒரு ஆர்ப்பாட்ட அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்தின் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்க, தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகின்றது. இன்றைக்கு ஸ்டாலின் மீது வேண்டுமென்றே சனாதான கும்பல் கல் எறிகிறார்கள். திட்டமிட்டு அதனைச் செயல்படுத்துகிறார்கள். நம் கொள்கை வழிநின்று ஏதாவது செய்திகளைக் கூறினால் நம்மை மிரட்டுகிறார்கள், தொலைப்பேசியில் தொல்லை தருகிறார்கள். இது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு மோசமான கலாச்சாரம் தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கின்ற காலக்கட்டம் இது. ஒரு கலாச்சார பாசிசம் என் கண்ணுக்கு எதிரே தெரிகிறது. 

 

அண்ணா, கலைஞர் இல்லாத குறையை இன்றைக்கு ஸ்டாலின் போக்கிக்கொண்டு இருக்கிறார். நூற்றாண்டு கண்ட இந்தத் திராவிட இயக்கத்தை தற்போது ஸ்டாலின் தூக்கி சுமந்து வருகிறார். நம்முடைய தமிழக மக்கள்தான், இன்னும் அவரை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லையே தவிர, மராட்டிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள உத்தேவ் தாக்கரே கூட இவரைத்தான் முதல்வராக நினைத்துக் கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமன் சோரன் பொறுப்பேற்றால் கூட அவர் ஸ்டாலினை தான் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறார். எனவே தென்னகத்தின் சார்பில் வாழத்துவதற்கு நம் தலைவரைத்தான் அழைக்கிறார்கள். அவரை விட்டால் அழைப்பதற்கு யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி யாரை அழைக்கிறார், நம்முடைய ஸ்டாலினைத்தான் அழைக்கிறார். தென்னாட்டு அரசியலில் அதிசயத்தை ஸ்டாலின் நிகழ்த்தி வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தேவையில்லாத ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளை நம்மீது வைக்கிறார்கள். எனவே அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, நாம் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபட வேண்டும்" இவ்வாறு பேசினார்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.