Skip to main content

’ஒரு ஸ்டேஜ்ல ஒரு ஆயிரம் கைதட்டல் கிடைக்காதான்னு ஏங்கி....’-தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

Published on 24/08/2018 | Edited on 24/08/2018

நெருப்புடா நெருங்குடா பாடல் மூலமாக பரவலாக பேசப்பட்டுவந்த பாடலாசிரியரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் திரைப்படம் ’கனா’, அப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன்தான் தயாரிக்கிறார்.

 

மேலும், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்தியராஜ் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலேயே தனது தயாரிப்பில் வெளிவரப்போகும் அடுத்த படக் குழுவினரை அறிமுகம் செய்து வைத்தார் சிவகார்த்திகேயன். அப்போது பேசியதாவது...

 

 

”என்னுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படமான கனா படக்குழுவ பார்த்துவிட்டோம். அதேபோல, என்னுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கும் 2-வது படக்குழுவையும் இதே மேடையில் தெரிவித்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். உங்க எல்லாரையும் சிரிக்க வைத்த யூ-ட்யூபில் கலக்கிகொண்டிருக்கும் ப்ளாக் ஷீப் குழுதான் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்கள் என்று தெரிவித்து, ஒட்டுமொத்த ப்ளாக் ஷீப் குழுவையும் மேடையில் அறிமுகம் செய்துவைத்தார். ப்ளாக் ஷீப் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நடிகர் விக்னேஷ் காந்த் பிசியாக இருப்பதால் இந்நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. இந்த குழுவின் யோசனை எங்கள் நிறுவனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் நிறைய காமெடி இருந்தது, அதனுள் சின்னதா ஒரு சோஷியல் விஷயம் இருந்தது என்று பெருமிதம் கொண்டார். இவர்கள் யூ-ட்யூபில் நம்மை என்டர்டைன்ட் செய்தது போல திரைப்படத்திலும் செய்வார்கள், அப்படியான முயற்சியாகத்தான் இது இருக்கும்” என்றார்.

 

siva

 

மேலும், ”இப்படத்தின் ஹீரோ சரவணன் மீனாட்சித் தொடரில் இறுதியாக சரவணன் என்னும் கதாபத்திரத்தில் நடித்த ரியோதான் என்று அறிமுகம் செய்துவைத்து. பின், இந்த நிகழ்ச்சியைக்கூட அழகா நடத்துவது இந்த ப்ளாக் ஷீப் குழுதான் என்று கூறினார். இறுதியாக சிவா, எங்கயோ ஒரு ஸ்டேஜ்ல ஒரு ஆயிரம் கைதட்டல் கிடைக்காதான்னு ஏங்கி, 'மிமிக்கிரி' பண்ணிட்டு இருந்த ஒருவனை, தூக்கிவந்து இப்படி ஒரு மேடையில் நிக்கவச்சதுக்கு. மொத்த தமிழக மக்களுக்கும் பெரிய நன்றி. இந்த வாய்ப்பும், வாழ்க்கையும் எனக்கும் என் குடும்பத்துக்கும் மட்டும் பயன்படாம, இன்னும் நிறைய பேருக்கு பயன்படற மாதிரி வாழுவேன். நான் சாகும்போது நாலுபேராவது 'ஒரு நல்ல விஷயம் பண்ணியிருக்கேன்னு சொல்ற மாதிரிதான் வாழ்ந்துவிட்டு போவேன், அப்படியான உறுதியை இந்த மேடையில் சொல்லிக்கொள்கிறேன்.... நன்றி அண்ட் 'லவ் யூ ஆள்' என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கனா' ஏற்படுத்திய ஸ்பார்க்கில் இதை நாங்க செஞ்சோம்' - இளைஞர்களை தூண்டிய சிவகார்த்திகேயன்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ்டர் லோக்கல்' படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார்.

 

sivakarthikeyan

 

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர். இதுகுறித்து இயக்குநர்கள் பொன்ராம் & எம்.பி.கோபி அவர்கள் பேசும்போது... "நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா  நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. அப்போதுதான் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த 'கனா' படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

 

 

அதன் காரணமாக திரு.சிவகார்த்திகேயன் அவர்களிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம் அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் அதற்கு பதிலாக அவருடைய கனா பட ஹீரோ தர்ஷன் அவர்களையும் அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ் அவர்களையும் அவர் ரசிகர் மன்ற மாநில  தலைவர் மோகன் தாஸ் அவர்களையும் & மிஸ்டர் லோக்கல் பட இயக்குனர் ராஜேஷ்.எம்  அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார். இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி".

 


 

Next Story

நான் யாருக்கு செய்றேன்னு சொல்லமாட்டேன், ஆனா செய்வேன் - சிவகார்த்திகேயன்  

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
siva

 

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, இவர்களுடன் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பேசியபோது...

 

"நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ட்விட்டரில் ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு ஐஸ்வர்யா தகுதியானவர். 20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். 

 

 

எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. 'அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா' என்ற பாடல் வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு ஒதுக்கி உதவி செய்ய இருக்கிறேன். நான் யாருக்கு என்ன செய்யப்போகிறேன் என்று நிச்சயமாக சொல்ல போவதில்லை. ஆனால் இந்த படம் எப்படி பல புதுமுக கலைஞர்களின் வாழ்க்கையை மாற்றியதோ அதேபோல் எங்கேயோ எதோ ஒரு மூலையில் இருக்கும் நலிந்த விவசாயின் வாழ்க்கையை கண்டிப்பாக நான் செய்யப்போகும் உதவி மாற்றும். இதை நான் சொல்லாமல் செய்யவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் படத்தில் இவ்வளவு விஷயங்களை சொல்லிவிட்டு இதை இங்கு பதிவு செய்யாமல் போனால் தப்பு என்று தோன்றியது. நாம் மட்டும் இந்த வெற்றியை கொண்டாடினால் நன்றாக இருக்காது. இது விவசாயிகளுக்கும் போய் சேர வேண்டும்" என்றார்.