Skip to main content

"இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம்" - சூரி அட்வைஸ்!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

vgdgdgde

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

 

இதனால் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நேற்று (20.05.2021) நடிகர் சூரி தன் மனைவியுடன் அருகில் இருக்கும் மாநகராட்சி அரசுப் பள்ளியில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார். அதில்... "இன்னைக்கு நானும் என் மனைவியும் பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும்போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்