சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. இவர் தமிழ் சினிமாவில் இதுவரை இரண்டு படங்களில்தான் நடித்திருக்கிறார். ஆனால், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவருக்கு மதுபான நிறுவனம் ஒன்றிடமிருந்து விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதற்காக பெரிய தொகை சம்பளம் தருவதாகத் தெரிவித்துள்ளது அந்த மதுபான நிறுவனம். ஆனால் அதை லாவண்யா ஏற்கவில்லை. இந்த விளம்பரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார். மதுபான விளம்பரங்களில் நடித்து அதை சமுதாயத்திற்கு ஊக்குவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
லாவண்யாவின் இந்த செயலால் சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சந்தீப் கிஷனுடன் இணைந்து ஏ1 எக்ஸ்பிரஸ் என்னும் படத்தில் நடித்திருக்கிறார். கரோனா அச்சுறுத்தலால் இப்படம் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.