Skip to main content

எடப்பாடி பழனிச்சாமி எங்கே? ப.சிதம்பரம் எங்கே? -சூடு பறக்கும் ‘டீ’ அரசியல்!

Published on 28/03/2018 | Edited on 28/03/2018
chidamparam

 

வி.வி.ஐ.பி.க்கள் டீ குடிப்பதும் அரசியலாகிவிடுகிறது.   சென்னை ஏர்போர்ட்டில் சில நாட்களுக்கு முன் டீ குடிக்கச் சென்றார் ப.சிதம்பரம். ஒரு டீ-க்கு நான் எவ்வளவு தரவேண்டும் என்று கேட்டார்.  ஒரு டீ ரூ.135 தான் என்று  நிர்ணயித்த கட்டணத்தைச் சொன்னார் கடைக்காரர். ஷாக் ஆன சிதம்பரம், அந்தக் கடையில் டீ குடிக்கவே இல்லை.  அப்போது, அதிக விலையில் டீ விற்பதை அங்கிருந்த நிருபர்களிடம் கூறிவிட்டு கிளம்பினார். 


டீ கடையில் ப.சிதம்பரத்தைப் போல் நடந்துகொள்ளவில்லை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சமுத்திரம் என்ற குக்கிராமத்தில், சாலையோர டீ கடையில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூவருடன் சேர்ந்து தானும் டீ குடித்தார்.  ‘டீ ரொம்ப நல்லாயிருக்கு’ என்று சொல்லிவிட்டு, ரூ.500-ஐ கொடுத்து பாராட்டவும் செய்தார். 


4 டீ-க்கு ரூ.500 கொடுத்ததால், செய்திக் குறிப்பில் அதனை  ‘தொகை’ என்று குறிப்பிட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடிக்கு தாராள மனசு எனச் சொல்வதா? ரூ.500 என்பதெல்லாம் அவருக்கு எம்மாத்திரம் என்று கருதுவதா?  எப்படி பார்த்தாலும், அட, கூட்டி வகுத்துப் பார்த்தாலும், ஒரு டீயின் விலை ரூ.125 என்றாகிவிடுகிறது. 

thiru


‘சாலையோர கடையின் டீ-க்கு ரூ.125 கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி எங்கே? ஏர்போர்ட் கடையின் டீ-க்கு. ரூ.135 தர மறுத்து, குடிக்காமல் சென்ற ப.சிதம்பரம் எங்கே?’ என்று அவரவர் இஷ்டத்துக்கு விமர்சிக்கும் போது,  ப.சிதம்பரம் தரப்பினர் “என்ன இருந்தாலும் முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் ப.சி. ஒரு ரூபாய் என்றாலும், அதன் மதிப்பை அறிந்தவர். அதனால், ஏர்போர்ட்டில் ப.சி. அப்படி நடந்துகொண்டது சரிதான்! எங்கிருந்தெல்லாமோ பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுவதால், பணத்தின் மதிப்பை அறிந்திடாமல், ஒரு டீ-க்கு எடப்பாடி ரூ.125 கொடுத்ததும், அவரது இன்றைய நிலைக்குச் சரிதான்.” என்று அரசியல் கணக்கை நேர் செய்து, சமாளிக்கிறார்கள். 


அட, போங்கப்பா.. நீங்களும் உங்க டீ அரசியலும்..!  

சார்ந்த செய்திகள்

Next Story

மோடி இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நடத்துவாரா? -ப.சிதம்பரம் கேள்வி

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

congress senior leader, former union minister chidambaram tweet

 

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,

 

"கரோனாவால் இறந்தோர் விவரங்களை இந்தியா, சீனா, ரஷ்ய நாடுகள் மறைக்கின்றன என ட்ரம்ப் பேசினார். அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். தனது நண்பர் ட்ரம்ப் கௌரவப்படுத்த இன்னொரு நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Next Story

காங்கிரஸ் செயற்குழு பட்டியல் வெளியீடு!  ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தியுள்ள சோனியா காந்தி!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020
cccc

 

 

அகில இந்திய காங்கிரசின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை புதிதாக மாற்றியமைத்திருக்கிறார் சோனியா காந்தி. இந்த மாற்றலில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சோனியாகாந்தி அசிங்கப்படுத்தி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர். 

 

அவர்களிடம் நாம் பேசியபோது, "காங்கிரஸில் 'வொர்க்கிங் கமிட்டி' என்கிற கட்சியின் செயற்குழுதான் அதிகாரமிக்கது. காங்கிரஸின் வலிமையான அமைப்பு என்பது இதுதான். செயற்குழுவின் புதிய பட்டியலில் 22 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 15-தாவது இடத்தில் பிரியங்கா காந்தியும் 16-வது இடத்தில் ப.சிதம்பரத்தையும் பட்டியலிட்டிருக்கிறார் சோனியா. இதை விட அவரை யாரும் அவமானபடுத்திட முடியாது. 

 

இன்றைக்கு கட்சியிலுள்ள மூத்த தலைவர்களில் மோடி அரசை தைரியமாக எதிர்கொள்வதும் விமர்சிப்பதும் சிதம்பரம் தான். அவரைப் போய் 16-வது இடத்தில் வைத்திருப்பது தவறு. அதுவும் கட்சிக்குள் கடந்த வருடம் வந்த பிரியங்கா காந்திக்கு பிறகு சிதம்பரம் என்பதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை " என்கிறார்கள். 

 

செயற்குழு உறுப்பினர்களை நியமித்திருப்பதுப்போல பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களையும் மாற்றியமைத்திருக்கிறார் சோனியாகாந்தி. இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த முகுல்வாஸ்னிக்கை மாற்றி விட்டு புதிய பொறுப்பாளராக தினேத் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூரை தெலுங்கானா காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமித்துள்ளார் சோனியா.