Skip to main content

பேருந்துக்குள் மோதிக் கொள்ளும் மாணவர்கள்... தொடர்ச்சியான பள்ளி மாணவர்கள் மோதலால் பதறும் புதுக்கோட்டை கிராமங்கள்

Published on 11/10/2018 | Edited on 11/10/2018

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் பேருந்துக்குள் மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் 3 நடந்துவிட்டது. இந்த மாணவர்கள் பிரச்சனை கிராம பிரச்சனைகளாக உருவெடுத்துவிடும் முன் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் காவல்துறையும் கிராமத்தினரும்.

 

சம்பவம் 1 

 

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் தனியார் பேருந்து.. ஆலங்குடி கடந்து கல்லாலங்குடி நுழைவாயில் வரும்போது பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் இளைஞர்கள் திடீரென சிலரை தாக்க இருதரப்பும் தாக்கிக் கொள்கிறது.  இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கொத்தமங்கலத்தில் இரவிலும் சாலை மறியல் நடந்தது. அடுத்தநாள் கொத்தமங்கலத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது பாதுகாப்பு இல்லை என்று போக்குவரத்து நிரவாகம் முடிவெடுத்து பேருந்துகளை நிறுத்திவிட்டது. அதன் பிறகு இரு தரப்பிலும் ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

SCHOOL

 

இது குறித்து சில போலிசார் கூறும் போது.. கொத்தமங்கலம் - பள்ளத்தி  விடுதி மாணவர்கள் மோதல் பலவருடங்களாக நடக்கிறது. இதனால் கிராம பிரச்சனை ஜாதிப் பிரச்சனை வரை போய்விட்டது. கடந்த ஆண்டு நடந்த தாக்குதல் சம்பவத்தில் சிலர் மீது வழக்கு போட்டதால் ஒரு வருடம் ஓய்ந்து மறுபடியும் தலைதூக்கிவிட்டது. இரு கிராம பெரியவர்களும் இணைந்து பேசுங்கள் என்றால் எங்கள் பேச்சுக்கு கட்டுப்படல என்று பெரியவர்கள் ஒதுங்குகிறார்கள் என்றனர்.

 

 சம்பவம் 2: 

 

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கறம்பக்குடி நோக்கி புறப்பட்ட பேருந்துக்குள் ஏறிய சில மாணவர்கள் ஒரு மாணவனை சரமாரியாக தாக்குகிறார்கள். மற்ற பயணிகள் கூச்சல் போட்ட பிறகு இறங்கிச் சென்றார்கள். இந்த வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் பரவியது. 

 

 சம்பவம் 3 :

 

புதுக்கோட்டையிலிருந்து வடகாடு செல்லும் தனியார் நகரப் பேருந்து ஆலங்குடி அரசமரம் அருகே வந்தபோது 4 மாணவர் பேருந்தில் ஏறி இரு மாணவர்களை சரமாரியாக தாக்க சக பயணிகள் சத்தம் போட்டதால் சாதாரணமாக இறங்கிச் சென்றனர். இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வேகமா பரவுகிறது. இந்த சம்பவத்தில் சிக்கப்பட்டி- கட்ராம்பட்டி மாணவர்கள் மோதிக் கொண்டார்கள். அடுத்தடுத்த கிராமங்கள் இரு வேறு சமூகங்கள் என்பதால் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

SCHOOL

 

இப்படி ஒரே வாரத்தில் 3 சம்பவங்களில் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டதால்  கிராம பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மேலும் ஜாதிகள் வேறு வேறாக இருப்பதால் அந்த பயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஜாதிய கருத்து மோதல்களும் உருவாகி காவல் நிலையம் வரை புகார் சென்றுள்ளது.

இந்த பிரச்சனைகளை இத்துடன் வளறாமல் தடுக்க கிராம பெரிவயர்களும், காவல் துறையும் இணைந்து ஒரு சுமூககமான முடிவை விரைந்து எடுக்கவில்லை என்றால் இந்த மாணவர்கள் மோதல் உச்சம் பெற்றுவிடும்.

 

மேலும் மாணவர்கள் பிரச்சனையை மாணவர்கள் பிரச்சனையாக மட்டுமே பார்க்க வேண்டும். மாறாக ஊர், ஜாதிப் பிரச்சனைகளாக அனுகினால் மோதிக்கொண்ட மாணவர்களுக்கு மேலும் துளிர்விட்டு மோதலை பெரிதாக்கிவிடுவார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஐ.பி.எல். ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி’ - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய தகவல் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Happy news for IPL fans MTC Important Information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். டிக்கெட்டை காண்பித்து சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நாளை (26.03.2024) நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை  காணவரும் பார்வையாளர்கள், தங்களது  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், மாநகர போக்குவரத்துக் கழகம் போட்டி முடிந்த பின்பும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட உள்ளது.

Happy news for IPL fans MTC Important Information

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் (Chennai Super Kings Cricket Limited) நிறுவனத்திடம் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த வசதியானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 22.03.2024 அன்று நடைபெற்ற போட்டியின் போது வழங்கிய ஒத்துழைப்பு போல் இந்த போட்டிக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.