Skip to main content

பணிக்கு வராத அரசு மருத்துவமனை டாக்டர் ;அலட்சியத்தால் இறந்தே பிறந்த குழந்தை!!

Published on 17/08/2018 | Edited on 27/08/2018

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ளது பொய்யுண்டார்கோட்டை கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் மனைவி கனிமொழி நிறைமாத கர்ப்பிணி. ஒவ்வொரு மாதமும் வடக்கூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றார். சுயப்பிரசவம் தான் நடக்கும் அதனால வேற எங்கேயும் போக வேண்டாம். வீட்லயும் பிரசவம் பார்க்க கூடாது லேசா வலி வந்ததும் இங்கே வந்துடனும் என்று சொல்லி சொல்லி அனுப்பினார்கள்.

 

child

 

 

 

16 ந் தேதி வயிற்றுவலி ஏற்பட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சொன்னது போலவே வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் சேர்த்தனர். முதலில் வலி குறைந்தது.

மாலை மீண்டும் வலி ஏற்பட்ட போது சுகாதார நிலையத்தில்  மருத்துவர் இல்லை செவிலியர்களே இருந்தனர். மருத்துவரை வரச் சொல்லுங்க இல்லன்னா 108 ல ஏற்றி தஞ்சாவூருக்கு அனுப்புங்க என்று கெஞ்சினார்கள் உறவினர்கள். மருத்துவர் இதோ வருகிறார் என்றே பதில் சொன்னார்கள் செவிலியர்கள் நள்ளிரவை தாண்டியதும் வலி அதிமானது அதன் பிறகு செவிலியர்களே பிரசவம் பார்த்தார்கள்..

 

 

child

 

 

 

குழந்தை சுயப்பிரசவம் தான் ஆனால் அந்த குழந்தை இறந்தே பிறந்தால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர் உறவினர்கள். மருத்துவர் இருந்திருந்தாலோ தஞ்சைக்கு அனுப்பி இருந்தாலோ குழந்தையை காப்பாற்றி இருக்கலாம். கடைசி வரை மருத்துவர் வரல. குழந்தை இறந்த தகவல் அறிந்து வேகமாக வரும் போது விபத்து என்று தனியார் மருத்துவமனையில் போய் படுத்துவிட்டார். பி மருத்துவர் பணி செய்யாமல் குழந்தை பலியாக காரணமாக இருந்ததால் பணி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தை சடலத்தை வாங்கமாட்டோம் என்று கிராம மக்களும் உறினர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள். போலிசார் குவிக்கப்பட்டனர் ஆனால் கோரிக்கை ஏற்கப்படும் வரை வீட்டுக்கு போகமாட்டோம் என்று இன்று இரவு வரை போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

 

வீட்ல பிரசவம் பார்த்தால் கைது செய்யும் அரசாங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் குழந்தை இறந்தால் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதா? ஏழைகளுக்கு நீதி கிடைக்காதா என்கின்றனர் உறவினர்கள்.

    

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.