Skip to main content

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு என வீட்டு பட்டா ரத்து செய்யலாமா? கலெக்டரிடம் கெஞ்சும் கரூர் மக்கள் !

Published on 08/01/2019 | Edited on 08/01/2019

கரூர் மாவட்ட நில உரிமை பாதுகாப்புக்குழு சார்பில், ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி தங்களது நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட நபர்கள் பலர் தாந்தோன்றிமலை பஸ் நிறுத்தத்தில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கண்டித்து அவர்களுக்கு எதிராக கோஷம் போட்டபடியே தாந்தோன்றிமலை மெயின்ரோட்டில் பேரணி சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும், பட்டாவை ரத்து செய்யும் முடிவை கைவிடு... என மக்கள் ஒட்டு மொத்த கூட்டமாய் ஆர்பரித்தார்கள்.

 

 Can a house patta be canceled as temple occupation? The people of Karur who plead with the collector!

 

இந்த தீடீர் போராட்டத்தின் தகவல் அறிந்த கலெக்டர் அன்பழகன் எழுந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்தார். அப்போது அவரை சுற்றி போலீசார் கைகளை கோர்த்தபடி பாதுகாப்புக்கு நின்றனர். அப்போது நில உரிமை பாதுகாப்புக்குழுவினர் உள்ளிட்டோர் கலெக்டரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

 Can a house patta be canceled as temple occupation? The people of Karur who plead with the collector!

 

அப்போது, நாங்கள் கடன் வாங்கியும், கையில் இருந்த பணத்தை செலவு செய்தும் குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசையில் தான் கரூர் மாவட்ட பகுதியில் வீடு வாங்கினோம். இந்த நிலையில் திடீரென கோவில் நில ஆக்கிரமிப்பு எனக்கூறி பட்டாக்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் வருவாய்துறை இறங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுக்கு எடுத்துகூறி உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்த மக்கள் தீடீர் போராட்டத்திற்கு காரணம் என்ன என்று விசாரித்த போது.. 

 

கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு குறித்து அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர் சபையினர் கோவில் நிர்வாகத்துடன் சேர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலின் தெற்குமடவளாகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கடையினை இழுத்து பூட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வெண்ணெய்மலை, காதப்பாறை, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட நில உரிமை பாதுகாப்புக்குழு என உருவாக்கி, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கரூர் வெண்ணெய்மலை, காதப்பாறை உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். அதன் பின்னரே ஊர்வலமாக கலெக்டர் அலுவலக முற்றுகை கோஷம் என்று கரூர் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டது. 

 

இது குறித்து கரூர் மாவட்ட நில உரிமை பாதுகாப்புக்குழுவினர். பத்திரிகையாளர்களிடம் நாங்கள் கடன் வாங்கியும், கையில் இருந்த பணத்தை செலவு செய்தும் குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசையில் தான் கரூர் மாவட்ட பகுதியில் வீடு வாங்கினோம். இந்த நிலையில் திடீரென கோவில் நில ஆக்கிரமிப்பு பட்டாவை ரத்து செய்வோம் என்பது நியாயமா?இந்த பிரச்சனைகளை உடனே தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் அடுத்த அடுத்த போராட்டங்கள் வெடிக்கும் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.