Skip to main content

51 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி பாய்லர் தொழிற்சாலை கூட்டுறவு சங்கத்தை கைப்பற்றிய அ.தி.மு.க

Published on 15/08/2018 | Edited on 27/08/2018
WIN

 

 

 

திருச்சி பெல் தொழிற்சங்கத்தை எப்போதும் தி.மு.க. தான் ஜெயிக்கும். எத்தனையோ அரசியல் மாற்றங்கள் ஏற்பாட்டாலும் தி.மு.க. தொழிற்சங்கம் மட்டுமே தொடந்து வெற்றிபெறும். இதனால் கடந்த 51 ஆண்டுகள் தொடர்ந்து தி.மு.க. வசம் இருந்த பெல் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை பறிகொடுத்தது. 

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் உட்கட்சி பிரச்சனைகளோடு, பஞ்சாயத்து உட்பட் நடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து சங்கத்தலைவர், துணைத்தலைவர்களுக்கான தேர்தலும் உடனே நடத்துகின்றார்கள். இதன் அடிப்படையில் திருவரம்பூர் பெல் பாய்லர் தொழிற்சாலையில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தல் ஏப்ரல் 27ம் தேதி நடைபெற்றது. 

இதில் அண்ணா தொழிற்சங்க தலைமையில், அம்பேத்கர்யூனியன், இன்ஜினியர் அதிகாரிகள் யூனியன், டிடிஎஸ், மற்றும் ஏஐடியூசி, பிஎன்எஸ்யூ, ராணிப்பேட்டை, எம்ப்ளாயீஸ் யூனியன், திருமயம் பிபிபிடிஎஸ், ஆகிய தொழிற்சங்கள் எல்லாம் இணைந்து போட்டியிட்டன. 

 

WIN

 

 

 

இதே நேரத்தில் தி.மு.க.வின் தொமுச தலைமையில் ஐஎன்டியூசி, சிஐடியூ, ராணிப்பேட்டை பெல் பிஏபிஎஸ்யூ, சூப்பரவைசர்ஸ் யூனியன், திருமயம் யூனியன் இணைந்து போட்டியிட்டார்கள். இவர்கள் இல்லாமல் மூன்றாவது அணியாக பாரதி மஸ்தூர் சங்கம் தனித்து போட்டியிட்டது. 


இதில் அண்ணா தொழிற்சங்க கூட்டணியில் சார்பில் வில்லியம் பீட்டர், பிரபாவதி, ஜெயலட்சுமி, லோகநாதன், இளங்கோவன் ஆகிய 5 பேர் இயக்குநர்களாக ஜெயித்தார்கள். 
தி.மு.க. கூட்டணியில் இளவரசி, மோகன், இளங்கோ, மகேஷ்குமார், கல்யாண்குமார், ஆகிய 5 பேர் இயக்குநர்களாக ஜெயித்தனர். பாரதிய மஸ்தூர் சங்கத்தில் போட்டியிட்ட பத்மநாபன் இயக்குநராக வெற்றிபெற்றார். 

இதனை தொடர்ந்து பெல் கூட்டுறவு சங்கத் தலைவர், துணைத்தலைவர், பதிவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. 

இதில் வெற்றி பெற்ற 11 இயக்குநர்களும் வாக்களித்தார்கள். பாரதிய மஸ்தூர் சங்க இயக்குநர் பத்மநாபன் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த வில்லியம் பீட்டர், தலைவராகவும், இளங்கோவன் துணை தலைவராகவும், வெற்றிபெற்றனர். கடந்த 51 ஆண்டுகளுக்கு பிறகு பெல் கூட்டுறவு சங்க தேர்தலில் தலைவர் துணைத்தலைவர் பதிவியை அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.