Skip to main content

சீனப் பொருட்களின் சந்தையாக இந்தியாவை மாற்ற மோடி திட்டமா?

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

ஒரு நாட்டின் ஜனாதிபதியை இன்னொரு நாட்டின் புராதன இடத்துக்கு அழைத்து வருவது மிகப்பெரிய சாதனை எதுவும் இல்லை. இந்திய பிரதமர் சீனாவில் முக்கியமான இடத்தை பார்க்க விரும்பினால், எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் சில அதிகாரிகளே அவரை அழைத்துப் போய் காட்டிவிடுவார்கள்.

ஆனால், இந்திய பிரதமர் மோடியின் விளம்பர ஆசை, போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஆசை ஒரு சின்ன சந்திப்பு நிகழ்ச்சியை பூதாகரமாக்கி மகிழச் செய்திருக்கிறது. அவருக்குத் தோதாக தமிழக அரசும் ஆட்டம் போடுகிறது.

இதற்கு முன் 1956ல் அதாவது 63 ஆண்டுகளுக்கு முன்னரே, மாமல்லபுரத்திற்கு சீன பிரதமர் சூ என் லாய் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்து போயிருக்கிறார். சீன தலைவர் மாவோவின் தோழரான அவரையே அன்றைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்தான் வரவேற்று மாமல்லபுரத்தை சுற்றிக்காட்டியிருக்கிறார். செங்கல்பட்டு என்றால் காஞ்சிபுரம், திருவள்ளூர் எல்லாம் சேர்ந்த மாவட்டம் என்பதை குறித்துக்கொள்ள வேண்டும்.

 

 Is Modi's plan to turn India into a commodity market?

 

பிறகு சென்னை நகராட்சி சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வரவேற்பில் காங்கிரஸாரும், பள்ளிக்குழந்தைகளும் சாலையின் இருபக்கமும் நின்று மலர்தூவி வரவேற்றிருக்கிறார்கள். இத்தகைய ஒரு வரவேற்பில் இந்திய பிரதமர் நேரு கலந்துகொண்டு பெருமைப்பட்டுக்கொள்ளவில்லை.

சூ என் லாய் இந்தியா வந்ததை இரு நாட்டு நல்லுறவின் அடையாளமாக நேரு கருதினார். இந்திய அரசு சார்பில் இந்தோ சீனா பை பை என்ற கோஷம் உருவாக்கப்பட்டு அதை பள்ளிக்குழந்தைகளும் முழங்கின. ஆனால், 1962ல் இந்திய சீன யுத்தத்தில் இந்தியா வெற்றிகரமாக பின்வாங்கிய நிகழ்வும் தொடர்ந்ததை மறந்துவிடக்கூடாது.

சீனாவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பது நல்லதுதான். ஆனால், சீனாவுக்கு போட்டியாக மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துக் கொண்டிருந்த இந்தியா இப்போது 7 ஆவது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேக் இன் இந்தியா என்று முழக்கமிட்ட மோடி, சீன அதிபரை இந்தியாவுக்கு கொண்டுவந்து எதைச் சாதிக்கப்போகிறார் என்பது புரியவில்லை. இரு தலைவர்களுக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்து ஆகாது என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அப்படியானால், மாமல்லபுரத்துக்கு சீன அதிபருடன் பிரதமர் மோடி வர வேண்டிய அவசியம் என்ன? கடற்கரை கோவில் முன்பாக விருந்து கொடுப்பதற்காக பிரதமரே வரவேண்டுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

 

 Is Modi's plan to turn India into a commodity market?

 

சீனாவின் 20க்கு மேற்பட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. சீனாவின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த உலகம் முழுவதும் வாய்ப்புகளை கேட்டு வருகிறது சீனா. மிகக்குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் சீனப் பொருட்கள் பல நாடுகளின் உற்பத்தியை நாசம் செய்வதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கெனவே தொழில்கள் நசிந்து வருகின்றன. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அறிமுகம் என்ற பல காரணங்களால் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி மோடியின் ஆலோசனையின் பேரில் பக்கோடா விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் வளர்முக நாடான இந்தியாவின் பிரதமர் மோடி, இன்னொரு வளர்முக நாடான சீனாவிடம் எத்தகைய உதவியை பெற்றுத்தர போகிறார்?

சீனா பட்டாசுகளைப் புறக்கணிப்போம் என்று முழங்கிய பாஜகவினர் இப்போது சீன அதிபரை வரவேற்று கொடி பிடிக்கிறார்கள். சீனாவின் மலிவுவிலைப் பொருட்கள் இந்திய சந்தையில் வந்து குவிந்தால், இந்தியாவின் சிறு தொழில்கள் மேலும் நாசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்திய பொருளாதாரம் குறித்து மோடி அரசுக்குத்தான் கவலையே இல்லையே. அந்த சீரழிவை விவாதிப்பதே தவறு என்று ஆர்எஸ்எஸ் தலைவரே சொல்லிவிட்டபோது, அரசு எப்படி விவாதித்து தீர்வு காணப்போகிறது?

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.