Skip to main content

புல்வாமா தாக்குதல்; கணவனை இழந்த பெண்ணின் நெகிழ்ச்சி கவிதை...

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

gjghjhgj

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் விபுதி சங்கர் தவுன்டியால் உள்பட 4 வீரர்கள் பலியாகினர். மேலும் அந்த தாக்குதலில்  ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் பலியான விபுதி சங்கர் தவுன்டியாலின் மனைவி நிகிதா, தனது கணவர் விபுதி சங்கருக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தனது கணவனையும், அவரது காதலையும், இந்த நாட்டிற்கான அவரது செயலையும் குறிப்பிடும் வகையில் மனதை கரைக்கும் அந்த கவிதை தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அப்படி அவரால் எழுதப்பட்ட அந்த கவிதை...

என்னிடம் பொய்யுரைத்துவிட்டாய்
'நிகிதா உன்னைக் காதலிக்கிறேன்' என..
சொல்லப்போனால் என்னைவிட
நீ அதிகம் காதலித்தது நாட்டைத்தான்...
எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது
ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை..
மக்களுக்காகவே உன் வாழ்க்கையை
தியாகம் செய்துவிட்டாய்..!
உறுதியான இதயம் கொண்டவன் நீ..
உன்னை என் கணவனாக பெற்றதில்
பெருமை எனக்கு..
நீ என்னை விட்டுச் சென்றது
அத்தனை வலிக்கிறது..
ஆனால் எனக்குத் தெரியும்
இறுதி வரை என்னுடன்தான் இருப்பாய்..
என் கடைசி மூச்சு வரை 
உன்னை காதலித்துக்கொண்டே இருப்பேன்..
ஐ லவ் யூ விபு!

 

hgjghjhgjg

விபுதி சங்கரின் மனைவியின் இந்த கவிதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புல்வாமா தாக்குதல் விவகாரம்; பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் ஆளுநர் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
CBI raids house of ex-governor who criticized PM Modi who Pulwama incident issue

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள். சாலை மார்க்கமாக அவர்கள் சென்றபோதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை.

அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு, விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால் பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும்’ கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனக் கூறினார். இவர் பேசியது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது, அரசு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று (22-02-24) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story

புல்வாமா தாக்குதல் விவகாரம்: அமித்ஷாக்கு சத்யபால் மாலிக் பதிலடி!

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

sathyapal malick versus amithsha related pulvama incident

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்த சத்யபால் மாலிக் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்.

 

சாலை மார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனப் பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சானது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது.

 

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவிக்கையில், "சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்த போது இது குறித்து எதுவும் கூறாமல்  தற்போது குற்றம் சாட்டுகிறார்" என்று கூறி இருந்தார். இந்நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சத்யபால் மாலிக், "நான் ஆளுநர் பதவியில் இருந்து விலகிய பிறகு தான் இந்த பிரச்சனையை எழுப்புகிறேன் என்று கூறுவது தவறானது. தாக்குதல் நடந்த அன்றே இதைப் பற்றி பேசி இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.