Skip to main content

"தேசத்தை குறைத்து மதிப்பிடும் முகங்களை வெளிப்படுத்தும் படம்" - பாராட்டித் தள்ளிய யோகி ஆதித்யநாத்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

yogi adityanath about the vaccine war movie

 

இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் வந்த நிலையில், பெரும் சர்ச்சை உண்டானது. தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரிவில் மற்றும் சிறந்த துணை நடிகை என்ற பிரிவிலும் 69வது தேசிய விருதுகளில் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது. 


  
இந்த நிலையில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான படம் 'தி வேக்ஸின் வார்'. இப்படம் கோரோனோவிற்கு எதிரான இந்தியாவின் போரின் அடிப்படையிலும், உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க மருத்துவத் துறை எடுத்த முயற்சிகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்தது.  இதில் நானா படேகர், பல்லவி ஜோஷி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து பேசிய பிரதமர் மோடி "ஒவ்வொரு இந்தியனையும் இப்படம் பெருமைப்பட வைத்துள்ளது" என படக்குழுவை பாராட்டியிருந்தார். மேலும் மாதவனும் படத்திற்கு பாராட்டு தெரிவித்தார். 

 


இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 'தி வேக்ஸின் வார்' படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தி வேக்ஸின் வார் என்று ஒரு புது படம் வந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் சிறந்த அறிவியல் சாதனைகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் படம் இந்தியாவுக்கு எதிரான சதிகளை அம்பலப்படுத்தவும், இந்திய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட அற்புதமான ஆராய்ச்சியை முன்னிலைப்படுத்தவும், உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு அதிக அங்கீகாரத்தை வளர்க்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

 

கோரோனோ காலகட்டத்தின் போது, ​அதை எதிர்த்து போராடுவது ஒரு தனிநபரின் போர் அல்ல. பிரதமர் ஒரு கேப்டனைப் போல வழிநடத்திய நிலையில், சில நபர்கள் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் இந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்த முயன்றனர். நாட்டிற்கு எதிரான இந்த சதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது மற்றும் தேசத்தை குறைத்து மதிப்பிடும் முகங்களையும் வெளிப்படுத்துகிறது" எனறுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.