Skip to main content

தயாரிப்பாளர்களுக்குள் இல்லாத ஒற்றுமை... டி.ஆர் தலைமையில் மற்றொரு சங்கம்...

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

tr

 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலுள்ள தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால், ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் தனியாக வந்து, 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அதில் டி.ஆர் மற்றும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் முரளி வெற்றிபெற்றார்.

 

இந்நிலையில், டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினர் புதிதாகச் சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக, 'தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சங்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 5 -ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியான நிலையில், நாளை இந்தச் சங்கத்தின் அறிமுக விழா நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்