Skip to main content

பாடகர் அறிவு புறக்கணிக்கப்பட்ட விவகாரம்... காரசாரமாக விளக்கமளித்த ஷான் வின்சென்ட் டி பால்!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

 

shan vincent de paul

 

இளம்பாடகர்கள் ‘தெருக்குரல்’ அறிவு மற்றும் தீ குரலில் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த மார்ச் மாதம் வெளியான பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தில் வெளியான இப்பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் அடித்தது. இதுவரை யூ-ட்யூபில் 31 கோடி பார்வையாளர்களை இப்பாடல் கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாஜா தளத்தில் ஷான் வின்சென்ட் டி பால், நவ்ஸ் -47, சந்தோஷ் நாராயணன் குரலில் 'நீயே ஒளி' என்ற பாடல் வெளியானது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

சுயாதீன இசைக்கலைஞர்களுக்கான இதழான 'ரோலிங் ஸ்டோன்ஸ்'-ன் ஆகஸ்டு மாத இந்திய இதழில் தீ மற்றும் ஷான் வின்சென்ட் டி பால் குறித்து ஒரு கட்டுரை வெளியானது. அந்த இதழின் அட்டைப்படத்தில் பாடகி தீ மற்றும் ஷான் வின்சென்ட் டி பால் ஆகியோர் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அதைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த 'ரோலிங் ஸ்டோன்ஸ்'இன்  இந்தியப் பதிப்பு, என்ஜாய் எஞ்சாமி மற்றும் நீயே ஒளி பாடல் மூலம் இந்த இரு கலைஞர்களும் எல்லைகளைக் கடந்து புகழ் பெற்றார்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. இப்பதிவைக் கண்ட ரசிகர்கள், இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவரான ‘தெருக்குரல்’ அறிவின் புகைப்படம் ஏன் இதில் இடம்பெறவில்லை எனக் கேள்வியெழுப்பினார். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதித்துவந்த நிலையில், ஷான் வின்சென்ட் டி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், 'ரோலிங் ஸ்டோன்ஸ்' இதழில் வெளியான கவர்ஸ்டோரி அடுத்து வெளியாகவுள்ள 'மேட் இன் ஜாஃப்னா' என்ற தன்னுடைய இசை ஆல்பம் மற்றும் பாடகி தீயின் மற்றொரு ஆங்கில இசை ஆல்பம் தொடர்பானது என்றும், 'ரோலிங் ஸ்டோன்ஸ்' வெளியிட்ட ட்விட்டர் பதிவினால்தான் இந்த குழப்பங்கள் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இசைத்துறையில் சாதிப்பது என்பது எவ்வளவு கஷ்டமானது என்று தனக்குத் தெரியும் எனக் கூறியுள்ள ஷான் வின்சென்ட் டி, பாடகர் அறிவுக்கு தான் எப்போதும் ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.

Next Story

4 பெண் இயக்குநர்களின் ஆந்தாலஜி; இயக்குநர் பா. ரஞ்சித் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 4 An Anthology of Women Directors; Director pa Ranjith First Look Released

 

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். திரைப்படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாகத் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் நான்கு பெண்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

 

பெண்களின் மாறுபட்ட கதைகளைக் கொண்டாட, நான்கு பெண் இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்திற்கு ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  இதன் இயக்குநர்களாக அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகியோர் உள்ளனர். மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.