Skip to main content

ஆண்ட்ரியா சொன்ன ஒற்றை வார்த்தையால் நிறுத்த நினைத்த ஷூட்டிங்கை நடத்தினோம் -  'நோ எண்ட்ரி' பட இயக்குநர் பேட்டி

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Director Alagukarthik

 

அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா, ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெய ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நோ எண்ட்ரி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் அழகு கார்த்திக்கை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"வித்தியாசமாக ஏதாவது படம் பண்ணலாம் என்று நினைத்தபோது காடு, நாய்களை மையப்படுத்தி ஒரு படம் பண்ணலாம் என்று முடிவெடுத்தேன். சின்ன படமாக ஆரம்பித்தது ஆண்ட்ரியா மேடம் வந்தவுடன் பெரிய படமாகிவிட்டது. மேகலாயாவின் சிரபுஞ்சியில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு அனுபவமே ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது. உலகத்திலேயே அதிக மழை பெய்யக்கூடிய இடம் சிரபுஞ்சி. எப்பவுமே அங்கு குளிர்ச்சியாக இருக்கும். எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் டயர்டே ஆகாது, வேர்வையே வராது.  

 

படத்தில் மழை வருவதுபோல ஒரு காட்சி இருக்கும். அதற்காக செயற்கையாக ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், அந்தக் காட்சி எடுக்க ஆரம்பிக்கும் முன் இயற்கையாவே மழை வந்துவிட்டது. லேசாக பெய்ய ஆரம்பித்த மழை ஒருகட்டத்தில் மோசமாக பெய்ய ஆரம்பித்துவிட்டது. எல்லோருமே ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு கிளம்பலாம் என்று முடிவெடுத்தபோது ஆண்ட்ரியா மேடம்தான் இதைத்தானே நாம எதிர்பார்த்தோம். ஷூட்டிங் பண்ணலாம் என்றார். மழை என்றால் நம் ஊரில் பெய்யும் மழைபோல இருக்காது. பயங்கரமான காற்றுடன், பிரம்மாண்டமான மழைத்துளிகளாக விழும். அவ்வப்போது மரம் சாய்ந்து விழும். ரொம்பவும் பயத்துடன்தான் ஷூட்டிங் நடத்தினோம். படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது பிரம்மாண்டமாக தெரியும். 

 

படத்தில் 15 நாய்கள் நடித்திருக்கின்றன. 25 நாட்கள் அந்த நாய்களுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம். மேகாலயாவில் செட் மட்டுமே 60 லட்ச ரூபாய் செலவில் போட்டோம். அந்த ஊர் உணவு ஒத்துக்கொள்ளாது என்பதால் நம் ஊரிலிருந்து 15 டன் உணவுப்பொருட்கள் எடுத்துச் சென்றோம். 

 

படத்தில் ஆண்ட்ரியா சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் எங்களைவிட அவர்தான் அதிக ஆர்வமாக இருந்தார். எங்களுக்கு முன்னாடியே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிடுவார். டபுள் டக்கர் ப்ரிட்ஜ் என்று ஒரு பாலம் உள்ளது. முழுக்க  முழுக்க மரத்தின் வேரினால் உருவான அந்த பாலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 4500 படிகள் கீழே இறங்க வேண்டும். 4500 படிகள் தவிர நிறைய கரடுமுரடான பாதைகளை தாண்டித்தான் செல்ல வேண்டும். அந்த இடத்தில் இரண்டு ஷாட் மட்டும்தான் எடுக்க முடிந்தது. இரண்டரை மணி நேரம் இறங்கி அந்த இடத்திற்கு சென்று, பின் மீண்டும் ஏறி வர 5 மணி நேரம் ஆனது. அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தாலும் அந்த பாலத்தை படத்தில் காட்டியதில் ரொம்ப சந்தோசம். 

 

நிறைய படம் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஆனால், இந்தப் படத்தை பார்த்தால் இது எந்த ஊரு, என்ன இடம் என்று ஒரு பிரமிப்பு ஏற்படும். நாய்கள் வரும் காட்சியை பார்க்கும்போதே பயம் ஏற்படும். 2 மணிநேரம் படத்தில் ஒரு மணி நேரம் சி.ஜி.தான். ஆனால், படம் பார்க்கும்போது எது உண்மை, எது சி.ஜி. என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது". இவ்வாறு இயக்குநர் அழகு கார்த்திக் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.