Skip to main content

திகில் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அரவிந்த் சாமி 

Published on 03/07/2018 | Edited on 03/07/2018
aravind swami

 

 

 

அரவிந்த் சாமி நடிப்பில் 'செக்கச் சிவந்த வானம்', 'சதுரங்க வேட்டை 2', 'நரகாசூரன்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் நிலையில் இவர் தற்போது தன் நீண்ட நாள் நண்பரும் 'புதையல்' பட இயக்குனருமான செல்வா இயக்கத்தில் 'வணங்காமுடி' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அரவிந்த் சாமி அடுத்தாக 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' ஆகிய திகில் படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கயுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. மேலும் படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

'அரவிந்தசாமிக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர்' - கள்ளபார்ட் இயக்குனர் புகழாரம் 

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
aravindswami

 

 

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளபார்ட்'.  அரந்த்சாமி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்குகிறார். வித்தியாசமான கதைக் களம் கொண்ட 'கள்ளபார்ட்' ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ராஜபாண்டி பேசும்போது.... "அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது" என்றார்.