Skip to main content

பாம்பே நடிகைகளுக்கு கிடைக்கும் மரியாதை கூட தமிழ் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் 

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
aishwarya rajesh

 

 

 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் 'கனா' படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் சினிமா வாழ்க்கை குறித்து பேசும்போது.... "முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கே மதிப்பு இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துகொண்டு இருக்கிறார்கள். நாம் ஒரு அமைப்பு ஆரம்பித்து அதற்கு உறுப்பினராக அவர்களை சேரச் சொன்னால் அவர்கள்  வருவார்களா...? ஹிந்தியில் ஹிந்தி பெண்கள் நடிக்கிறார்கள், மலையாளத்தில் கேரள பெண்கள் நடிக்கிறார்கள், ஆனால், தமிழில் மட்டும்தான் தமிழ் பெண்கள் பெரும்பாலும் நடிக்கிறது இல்லை. ரெஜினா, சமந்தா இரண்டு பேரும் நன்றாக  தமிழ் பேசுவார்கள். ஆனால், ஆரம்பத்தில் அவர்களுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க வில்லை. பின்நாளில் அவர்கள் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக ஆனதுக்கு பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரித்து அவர்களை வரவேற்றது. 

 

 

 

தன்ஷிகா நன்றாக தமிழ் பேசுகிற ஹீரோயின். ஆனால், அவருக்கு  படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் இதேபோல் இருந்தும் அவர்களும் பெரிய படங்களில் நடிக்க முடிவதில்லை. இவ்வளவு ஏன் மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் ஒரு திருச்சி பெண். மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய பிறகு தான் அனு கீர்த்தி யார் என்று  நமக்குத் தெரிய வந்தது. இது போல் அனு கீர்த்திகள் நிறைய பேர் இங்கு உள்ளனர். நாம் தான் அவர்களை அடையாளம் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறோம். இது எல்லாவற்றையும் மீறி நம் பெண்கள் நடிக்க வந்தால்  அவர்களை மதிக்க மாட்டார்கள். ஒழுங்காக சாப்பாடு கூட போட மாட்டார்கள். பாம்பே பெண்களுக்குக் கிடைக்கின்ற மரியாதையை விட நமக்கு ஒரு படி குறைவாத்தான் கிடைக்கும். நம்ம ஊர் பெண்கள் அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு ஒரு அமைப்பு ஆரம்பித்து, அதில் பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்து வைத்தால் எனக்கு சந்தோஷம் தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்கு ரெடி. சினிமாவில் பெண்களுக்கு நடக்கிற பிரச்சினைகள் எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் என்னிடம் வந்துவிட்டது. தவிர, எங்கள்பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்புகளும், ஆட்களும் இருந்தார்கள் என்றால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம்" என்று துணிச்சலாக கூறியுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

'கனா' ஏற்படுத்திய ஸ்பார்க்கில் இதை நாங்க செஞ்சோம்' - இளைஞர்களை தூண்டிய சிவகார்த்திகேயன்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ்டர் லோக்கல்' படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார்.

 

sivakarthikeyan

 

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர். இதுகுறித்து இயக்குநர்கள் பொன்ராம் & எம்.பி.கோபி அவர்கள் பேசும்போது... "நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா  நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. அப்போதுதான் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த 'கனா' படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

 

 

அதன் காரணமாக திரு.சிவகார்த்திகேயன் அவர்களிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம் அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் அதற்கு பதிலாக அவருடைய கனா பட ஹீரோ தர்ஷன் அவர்களையும் அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ் அவர்களையும் அவர் ரசிகர் மன்ற மாநில  தலைவர் மோகன் தாஸ் அவர்களையும் & மிஸ்டர் லோக்கல் பட இயக்குனர் ராஜேஷ்.எம்  அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார். இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி".