Skip to main content

முதல்வர் பதவியை தக்கவைக்க பெயரை மாற்றிய எடியூரப்பா..!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

சுதந்திர இந்தியா வரலாற்றில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அரசியல் அதிசயங்கள் கர்நாடகத்தில் மட்டும் எளிதாக நடக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான தேர்தல்களில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. இது கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகத்தில் நடக்கும் அரசியல் விநோதம். குறிப்பிட்டுசொல்ல வேண்டுமானால் இந்த 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மூன்று பேர் மட்டுமே கர்நாடகத்தின் முதல்வராக தங்களுடைய முழு பதவி காலத்தையும்  நிறைவு செய்துள்ளார்கள்.

 yeddyurappa to yediyurappa



பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு இடையே நேற்று கர்நாடகத்தின் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்  எடியூரப்பா. தற்போது முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பா, இதற்கு முன்பு மூன்று முறை முதல்வராக இருந்திருந்தாலும் தன்னுடைய முழு பதவிக்காலத்தை ஒருமுறை கூட நிறைவு செய்யவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் 4-வது முறையாக அவர்  முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், புக்கனகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா என்ற தனது முழுப் பெயரை 2007-ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற போது B.S yeddyurappa என ஆங்கிலத்தில் மாற்றிக்கொண்டார். ஆனால்  அப்போது அவர் வெறும் 7 நாட்களே பதவி வகித்தார். அதன் பின்னர் பதவியேற்றக் காலங்களிலும் அவர் முழுமையாக பதவி வகிக்கமுடியவில்லை. இதனால், இந்த முறை நியூமராலஜியின் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் B.S yediyurappa என மாற்றிக்கொண்டுள்ளார். இந்த முறையாவது அவரின் எண்ணம் ஈடேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேகதாது விவகாரம் - கர்நாடக முதல்வரின் கொடும்பாவி எரிப்பு!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
h

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. 

 

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன்  தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது,  தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், கர்நாடக அரசின் அராஜக போக்கை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் எனவும்  முக்கிய வீதிகள் வழியாக முழக்கங்கள் எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றவர்கள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணாடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

 

Next Story

"மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடுக"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 04/07/2021 | Edited on 04/07/2021

 

tamilnadu chief minister wrote a letter for karnataka chief minister

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இன்று (04/07/2021) கடிதம் எழுதியுள்ளார்.  

 

அந்த கடிதத்தில், "மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாகக் கூறும் கருத்தை ஏற்க முடியாது. பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. மேகதாது திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு அங்கீகரித்த நதிநீர் பங்கீட்டு அளவை குறைத்துவிடும். தமிழகம்- கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேகதாது திட்டத்திற்கு ஒத்துழைப்பு கேட்டு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, நேற்று (03/07/2021) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.