துப்பறிவாளனை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அவன் இவன் படத்தில் மாறுகண் ஏற்று நடித்திருந்த சமயத்தில் அவருக்கு தலை வலி ஏற்பட ஆரம்பித்தது. அதிலிருந்து நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார் விஷால். மேலும் துப்பறிவாளன் படத்தில் நடித்த போது ஒரு சண்டை காட்சியில் தோளில் காயம் ஏற்பட்டது. அதனால் தலைவலி பாதிப்பு இன்னும் அதிகமானது. அவ்வப்போது சிகிச்சைகள் மேற்கொண்டு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் சண்டக்கோழி 2 படத்தில் விஷால் நடித்து கொண்டிருந்த போது திடீரென மீண்டும் தலைவலி உண்டானது. இதனால் கடந்த வாரம் டெல்லி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கொண்டு அவர் மூட்டு வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.இதையடுத்து தலைவலி மற்றும் மூட்டுவலி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஷால் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிகிச்சை முடிந்து விஷால் பத்து நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஷாலுக்கு அறுவை சிகிச்சை!
சார்ந்த செய்திகள்
Next Story
நடிகர் சங்க தேர்தலின் வாக்குகளை எண்ணலாமா? அல்லது மறுதேர்தல் நடத்தலாமா? -பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் வாக்குகள் எண்ணப்படாத நிலையில் இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மறு தேர்தல் நடத்தலாமா? அல்லது வாக்கை எண்ணலாமா? என்பதை வழக்கின் மனுதாரர்களின் இருதரப்பும் பேசி முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு தேர்தலுக்கு 30 லட்சம் செலவானது. எனவே மறுதேர்தல் சாத்தியமற்றது எனக் கூறிய விஷால் தரப்பு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என வாதிட்டது. தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமாக மறு தேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பு வாதம் செய்தது.
இந்நிலையில் நடிகர் சங்கதிற்கு மறு தேர்தல் நடத்துவதா? அல்லது நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதா? என நடிகர் விஷால் தரப்பும், ஏழுமலை தரப்பும் செப்டம்பர் 24 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
Next Story
விஷால் நிறுவன கணக்காளர் ரம்யாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன கணக்காளரின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தன்னுடைய தந்தையைத் தொடர்ந்து, சில படங்களைத் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம், சென்னை, வடபழனி, குமரன் காலனியில் உள்ளது. இதில், சாலிகிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்பவர், பெண் கணக்காளராக கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதலே விஷால் பிலிம் பேக்டரி, வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டி.டி.எஸ். தொகையில் இருந்து பணம் காணாமல் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், இது குறித்து சோதனை செய்ததில், கணக்காளர் ரம்யா அரசுக்கு கட்ட வேண்டிய டி.டி.எஸ். தொகையை, தன்னுடைய கணவரின் வங்கிக் கணக்கிற்கும், குடும்ப உறுப்பினர் ஒருவருவரின் வங்கிக் கணக்கிற்கும் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மோசடி செய்த ரம்யாவை கைது செய்ய வேண்டும் என்றும், மோசடி செய்த 45 லட்ச ரூபாயைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதனடிப்படையில், கணக்காளர் ரம்யா மீது, மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரம்யா முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரம்யாவின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.