Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்! வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 2

Published on 03/01/2024 | Edited on 04/01/2024
vietnam travel series part 2

“அப்பா டூர்க்கு எங்கபோற? “வியட்நாம்னு ஒரு நாட்டுக்குப்பா” “அது எங்க இருக்கு? “ரொம்ப தொலைவுல இருக்கு. “எப்படிப்போற? “ஃபிளைட்ல “என்னது பிளைட்லயா? “ஆமாம்டா “அப்போ நானும் வர்றன்ப்பா “ஒருநாட்லயிருந்து இன்னொரு நாட்டுக்கு போக பாஸ்போர்ட் எடுக்கனும், விசா வாங்கனும். உனக்கு இன்னும் பாஸ்போர்ட் எடுக்கல, எடுத்ததும் கூப்பிட்டுக்கிட்டு போறன். “பிளைட் பறக்கும்போது கீழே கடல் பார்க்க முடியுமாப்பா “பார்க்கலாம்டா. “அப்போ, நீ போகும்போது பிளைட் வெடிச்சிடும் கடல்ல விழுந்து திமிங்கலம் உன்ன சாப்பிட்டுடும் பார்த்துக்க.. “அடேய் என அருகில் இருந்த மனைவி அலறினார். நான் சிரித்தபடி அதெல்லாம் வெடிக்காது, வெடிச்சதுன்னா எங்களை காப்பாத்திக்க ஃலைப்ஜாக்கெட் தருவாங்க. “அது கீழத்தானே வரும் ஆமாம்.  “நீ கடல்ல விழும்போது சுறா மீன் உன்னை கடிச்சி தின்னுடனும் எனச்சொன்னதெல்லாம் விமானத்தில் பறக்கும்போதுதான் நினைவுக்கு வந்தது.

இதனை அருகில் அமர்ந்திருந்த நண்பரான பள்ளி தலைமைஆசிரியர் பகிர்ந்துகொண்டபோது, அடேய் ஏன்டா இம்சையை தர்ற, எதை எப்போ சொல்றதுன்னு இல்லையா என்பதுபோல் பார்த்தார். “இரண்டு மணி நேரத்திற்குள் மேற்குவங்கம் கொல்கத்தா நேதாஜி இன்டர்நேஷனல் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது நாங்கள் பயணித்த விமானம். கனெக்டிங் விமானம் என்பதால் விமானத்திலிருந்து இறங்கி வியட்நாம் தேசத்தின் தலைநகரம் ஹனாய் நகரத்துக்கான விமானத்துக்கு ஃபோர்டிங் செய்யவேண்டியிருந்தது. டிக்கெட் எடுத்துக்கொண்டு இமிகிரேஷன் பகுதிக்கு சென்றோம். இமிகிரேஷன் பகுதியில் வெளிநாட்டுக்கு செல்வதற்கான சீல் முதல்முறையாக கடவுச்சீட்டில் விழுந்தது.

vietnam travel series part 2

“அடுத்ததாக செக்யூரிட்டி செக்கிங்குக்காக வரிசையில் நின்றபோது சில மணி நேரங்களுக்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் இதேபோல் செக்கிங்குக்காக நின்றது நினைவுக்கு வந்தது. “விமானத்தில் பயணிப்பவர்கள் செக்யூரிட்டி செக்கிங் செய்யும் இடத்தில் பெல்ட், பர்ஸ், செல்போன், வாட்ச், பேனா உட்பட எல்லாவற்றையும் ஒரு ட்ரேவில் வைத்து கன்வேயர் ஃபெல்டில் வைக்கவேண்டும். அதை செக் செய்வார்கள் என முன்பே சொல்லியிருந்தார்கள். ஓ இதுவேறயா என நினைத்துக்கொண்டேன். அதேபோல் ட்ராவல் ஃபேக்கில், சட்டை, பேன்ட் பாக்கெட்டில் பிளேடு, கத்தி, பேனா, சாவி கூட இருக்ககூடாது என கிலி ஏற்படுத்தியிருந்தார்கள். அதனால் உடைகளை பேக் செய்யும்போதே பார்த்து பார்த்து பேக்கிங் செய்துயிருந்தேன். “சென்னை விமான நிலையத்தில் நாங்கள் செல்லவேண்டிய விமான நிறுவனத்துக்கான ஊழியர், எங்களுக்கான டிக்கட் தரும்போது எங்கள் மூவரிடம் சம்மந்தம்மில்லாமல் எதுக்கு போறீங்க?, எங்கே தங்கப்போறீங்க என கேள்வியாக கேட்டுக் கொண்டுயிருந்தார். 

இதுயெல்லாம் இமிகிரேஷன் ஆபிஸர் கேட்கவேண்டிய கேள்வியாச்சே, இதையேன் இவுங்க கேட்கறாங்க என நினைத்துக்கொண்டு இருந்தபோது, என்ன நினைத்தாரோ பயணத்துக்கான டிக்கட் தந்துவிட்டார். செக்யூரிட்டி செக்கிங் சென்று ட்ராவல் ஃபேக்கை ட்ரேவில் வைத்து அனுப்பிவிட்டு கையில் பாஸ்போர்ட், டிக்கெட்டோடு போய் நின்றேன். மெட்டல் டிடெக்டர் வைத்து செக் செய்தார்கள் மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் இரண்டு காவலர்கள். “மெட்டல் டிடெக்டர் என் இடுப்புக்கு அருகில் வந்ததும் பீப், பீப் என சத்தம் போட்டது. பாக்கெட்டில் இருந்த பேனா, கையில் வைத்திருந்த பாஸ்போர்ட், விமான டிக்கட்டை கீழே வைக்கச்சொன்னார் வைத்ததும் மீண்டும் செக்கிங். இடுப்புக்கு கீழே வந்தபோது  மீண்டும் பீப், பீப் சத்தம். அவர்கள் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தபோது, நான் என்ன இடுப்புல வெடிகுண்டாடா வச்சியிருக்கன் என வடிவேல் போல் மைன்ட் வாய்ஸ் உள்ளுக்குள்ளேயே கேட்டது.

“இடுப்புல என்ன என கேட்டவரிடம், “பதில் ஏதும் சொல்லாமல் சடாரென சட்டையை தூக்கி பார்த்துக்க எனக்காட்டியதும்  அவர்களின் முகத்தில் அதிர்ச்சியை கண்டேன். அவர்கள் அதிர்ச்சியானதை பார்த்து நான் கண்டுகொள்ளவில்லை. இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி அர்ணாக்கயிறை ஃபேன்ட் மேல் போட்டுயிருந்ததை பார்த்துவிட்டு அர்ணாக்கொடியா என்றார் பாதுகாப்பு படை காவலர். செக்யூரிட்டி செக்கிங் குறித்து ஏற்கனவே நண்பர்கள் சொல்லியிருந்ததால், நாமயென்ன ஆபிஸ் மீட்டிங்கா போறோம் பக்காவா ட்ரெஸ் செய்துக்கிட்டு, டக்இன் பண்றதுக்கு. போறது ஊர் சுத்த. அங்கப்போய் பட்டாபட்டி டவுசர் போட்டுக்கிட்டு ஊர் தான் சுத்தப்போறோம், அதுக்கு எதுக்கு ஃபெல்ட். பிளைட் ஏறும்போதுயெல்லாம் அதைவேற கழட்டி வைக்கனும் என யோசித்தே அதனை அணிந்துவரில்லை. பர்ஸ் கூட எடுத்துக்கொள்ளவில்லை. ஃபேன்ட் இடுப்பில் நிற்க அர்ணாகயிறு பயன்படுத்திக்கொண்டேன். அந்த வெள்ளி அர்ணாக்கொடிக்கு தான் அது பீப், பீப் என சத்தம் போட்டுள்ளது.

vietnam travel series part 2

“அர்ணாக்கொடி வெளியே இல்லாம இருந்துயிருந்து உள்ள என்னயிருக்குன்னு  திரும்ப கேட்டுயிருந்தா இவன் ஃபேன்ட் கழட்டி காட்டியிருப்பானோ என மனதுக்குள் கண்டிப்பாக நினைத்துயிருப்பார் அந்த காவலர். “அர்ணாக்கொடியா என அவர் கேட்ட கேள்விக்கு, ம் என தலையாட்டியதும் ஓ.கே, போ என தலையாட்டி விமானத்துக்கு வழிவிட்டதை நினைத்துபார்த்தேன்.  “கொல்கத்தா விமானநிலையத்தில், செக்யூரிட்டி செக்கிங்கின் போது பீப், பீப்னு கத்தும்மே இங்க என்ன கேட்கப்போறாங்கன்னு தெரியலயே என நினைத்துக்கொண்டு நின்றிருந்தேன். நம்ம சென்னை விமான நிலையம் போல் இல்லாமல் கொஞ்சம் சொதப்பலாகவே செக்யூரிட்டி செக்கிங் இருந்தது. வேகவேகமாக முடித்து விமான நிலைய டெர்மினருக்கு சென்று அமர்ந்தபோது அப்பாடா என்றிருந்தது.   

“ஸ்மோக்கிங் பகுதியில் ஆண், பெண் என பேதம்மில்லாமல் கூட்டம் கூட்டமாக என்னைப்போன்ற இளையோர் நின்று கொண்டு ஊதிக்கொண்டு இருந்தார்கள். புகை உடலுக்கு பகை எனச்சொல்லத்தான் ஆசை. நம்மவூர்ல நாம சொன்னாலே கேட்கமாட்டாங்க, வெளி மாநிலத்தில் வந்து சொன்னால் நாம ஒன்னு சொல்ல மொழி புரியாம கன்னத்தில் குடுத்துட்டா அதனால் செல்போனுக்குள் தஞ்சமடைந்தேன். “வியட்நாம் செல்வதற்கான விமானத்துக்குள் ஏறினால் சென்னையில் இருந்துவந்த அதே விமானம். 9.30 மணிக்கு கிளம்பிய விமானம், வியட்நாம் தலைநகர் ஹனாய் நகரில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் இரவு 1.30 மணிக்கு தரையிறங்கியது. எங்கள் விமானம்  தரையிறங்கிய 5 நிமிட இடைவெளியில் சீனாவில் இருந்து வந்த ஒரு விமானமும் தரையிறங்கியது.

“சர்வதேச விமான நிலையம் ஆள் ஆரவரமற்ற பகுதிபோல் இருந்தது. இமிகிரேஷன் பகுதி க்யூவை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டோம். இரண்டு அலுவலர்கள் மட்டும் சுமார் 400, 500 பயணிகளுக்கான இமிகிரேஷனை செக் செய்து கொண்டு இருந்தார்கள். ஒருஆள் நகர 3 முதல் 5 நிமிடம்மானது. இமிகிரேஷன் அலுவலரிடம் பாஸ்போர்ட், விசா தரவேண்டும் என்பதால் அதனை எடுத்து கையில் வைத்துக்கொண்டு க்யூவில் நின்றுகொண்டு இருந்தோம். அப்போது  உடன் வந்த நண்பர் தனது ஷோல்டர் பேக்கை தலைகீழாக கொட்டி துயாவிக்கொண்டு இருந்தார். என்ன சார் தேடறீங்க? “பாஸ்போர்ட் காணலைங்க.“  பயணம் தொடரும்……