Skip to main content

இங்கிலாந்து ராணியின் கணவர் மரணம்!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

ELIZABETH AND PHILIP

 

இங்கிலாந்தின் தற்போதைய ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவரின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 99. 

 

இளவரசர் பிலிப், இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில், மிக நீண்ட காலம் இளவரசராக இருந்தவராவர். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் எலிசபெத்திற்கு ஆதரவாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட ஆவர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். இளவரசர் பிலிப்பின் மரணத்தை பக்கிம்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்