Skip to main content

மின்னல் வேகத்தில் உயரும் கரோனா தொற்று... அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

fg


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 1,46,40,326 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவில் இருந்து குணமாணவர்களின் எண்ணிக்கை 87,30,348 ஆக உள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,08,854 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்