Skip to main content

பெண் வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

women lawyer police chennai principal court judge order

சென்னையில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜனின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

 

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் வழக்கறிஞரின் தனுஜா ராஜனின் மகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அபராதம் விதித்ததற்காக காவல்துறையினருடன் பெண் வழக்கறிஞர் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, காவல்துறையினர் பெண் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த நிலையில், பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் தனக்கும், தனது மகளுக்கும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று (10/06/2021) நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான வழக்கறிஞரும், மனுதாரருமான தனுஜா ராஜன், "நான் பேசியதை எடிட் செய்து சாதகமான வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது" என வாதிட்டார்.

 

அப்போது காவல்துறைத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பணிச் செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டலும் விடுத்ததால் முன்ஜாமீன் தரக்கூடாது" என வாதிட்டார். 

 

இதையடுத்து நீதிபதி செல்வக்குமார், "பெண் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவத்தில் முன் ஜாமீன் தந்தால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்" எனக் கூறிய நீதிபதி வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனுவையும், அவரது மகளின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்