Skip to main content

விருதுநகர் பாலியல் வன்கொடுமை: 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி.!

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

virudhunagar women incident court cbcid

 

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 806 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்துள்ளது. 

 

விருதுநகர் மாவட்டத்தில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட எட்டு பேரை சி.பி.சி.ஐ.டி. கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் பெற்றோர் உள்ளிட்ட 120- க்கும் மேற்பட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 

 

அதன் அடிப்படையில், 806 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. தயாரித்தது. ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு பேருக்கு எதிராக ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்திலும், பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு எதிராக விருதுநகர் இளம் சிறார் நீதி குழுமத்திலும் சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்