Skip to main content

தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம்;தமிழகத்திற்கு தலைகுனிவு!-பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம்!!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
pon

 

டெல்லியில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலை சிலர் செய்துள்ளது கண்டனத்திற்குரியது என தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டத்திற்கு பாஜக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,

 

எந்தக் காரணத்தைக் கொண்டும் மானமுள்ள தமிழன் உயிரே போனாலும் கூட இதுபோன்ற விஷயத்தை செய்ய மாட்டான்.  இது ரொம்ப கொச்சைத் தனமான, மட்டரகமான, மனிதனால் சொல்ல முடியாத அளவிற்கு நடந்துள்ளதை  ஏற்றுக்கொள்ள முடியாது.

 

எந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகளும் போராட்டத்தில் அப்படி நடந்துகொள்ளவில்லை, இதை நான் ஒரு தமிழனாய் சொல்கிறேன். ஆனால் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? இது மிக மோசமானது. தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த ஒரு கூட்டம் அங்கு இருக்கிறது எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்