Skip to main content

எனது வீட்டில் இருந்து பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை - விஜயபாஸ்கர்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

்ப


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 8 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் பெயர்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக புகார் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் ரெய்டு நடவடிக்கைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், " எனது வீட்டில் இருந்து பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. அரசியலில் இந்த சோதனைகள் வருவது இயற்கையான ஒன்றுதான். லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது எனக்கு ஆதரவு தெரிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி" என கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்