Skip to main content

மாஞ்சா நூல் காற்றாடி... சென்னையில் 8 பேர் கைது!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019
police

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தில்பட்டு 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடிகள் விட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராகுல், முகேஷ் உள்ளிட்ட 8 பேரிடம் இருந்து 17 காற்றாடிகள் ,18 மாஞ்சா நூல் சுற்றப்பட்ட லோட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்